கிளிநொச்சி நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு மாவா என்கின்ற போதை வஸ்தை விற்பனை செய்தார் என்ற சந்தேகத்தில் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிக்கன்னவின் விசேட குழுவினரால் நேற்று முன்தினம் இரவு ஒருவர் இரணைமடுப் பகுதியில் வைத்து கைதுசெய்யப் பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் பாடசாலை மாணவர்களுக்கு குறித்த போதைவஸ்தை விநியோகிக்கின்றார் என கிராம மக்களால் கிளிநொச்சி முல்லைத்தீவுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிக்கன்னவுக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக அப்பகுதி சிறுவன் ஒருவனுடன் சிவில் உடையில் சென்ற பொலிஸார் ஒருவர் போதைப்பொருள் விற்பவரிடம் பணம் கொடுத்து போதைப்பொருளை பெற்றுக்கொண்டதுடன் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்த சம்பவத்தினையும் உறுதி செய்துகொண்டதுடன் சந்தேகநபரை கைதுசெய்துள்ளார்.
மேலதிக விசாரணைகளின் போது அவர் குறித்த போதைப் பொருளினை விற்பனை செய்வதற்கான அனுமதிப் பத்திரம் இல்லாமலே விற்பனை செய்துள்ளார் என தெரிய வந்துள்ளதுடன் சந்தேக நபரை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM