அமெரிக்கவின் வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணிபுரிந்த பிரிகேடியர் ஒருவர் தலைமறைவாகியுள்ளார். சேவை காலம் முடிவடைந்துள்ள நிலையில் இராணுவ தலைமையகம் அவரை நாடு திரும்புமாறு அழைத் துள்ள நிலையிலேயே அவர் தலைமறைவாகியுள்ளார்.
இதனையடுத்து அவரை கைது செய்யுமாறு சர்வதேச பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.
கஜபா படையணியில் இணைக்கப்பட்டிருந்த பிரிகேடியர் ஜயந்த ரத்நாயக்க என்பவரே இவ்வாறு தலைமறைவாகியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் 2014 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் பாதுகாப்பு ஆலோகராக நியமிக்கப்பட்டு வொஸிங்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு பணிக்காக அனுப்பப்பட்டார்.
2016 ஆம் ஆண்டில் அவரது சேவை காலம் நிறைவடைந்து நாடு திரும்ப வேண்டிய நிலையில் அவர் இதுவரையில் இலங்கைக்கு வரவில்லை. வொஸிங்டன் நகரில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக கடற்படை அதிகாரி ஒருவருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
தனது பதவி காலம் முடிவடைந்தும் இதுவரையில் பிரிகேடியர் ஜயந்த ரத்நாயக்க இராணுவத்தில் பணிக்கு திரும்பாத நிலையில் , அவர் இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்றவராக கருதப்பட்டு சட்டநடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரட்ண தெரிவித்தார்.
பிரிகேடியர் ஜயந்த ரத்நாயக்க இராஜதந்திர கடவுச்சீட்டுடன் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை உடனடியாக கைது செய்யுமாறு சர்வதேச பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த பல வருடகாலமாக இராணுவத்திற்கு கிடைத்து வந்த இராஜதந்திர பாதுகாப்பு ஆலோசகர் பதவி இனி கிடைக்காமல் போகும் எனவும் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM