யுத்த குற்றச்சாட்டுக்களில் ராஜபக் ஷவினரை மன்னிக்க வேண்டும் என ஒரு சிலர் கூறுகின்றனர். எவரதும் அநாவசிய மன்னிப்புகள் எனக்கு அவசியம் இல்லை. எனக்கு நியாயமே அவசியம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ தெரிவித்தார்.
எமக்கு எதிராக தனிப்பட்ட அரசியல் பழிவாங்கல் இடம்பெற்று வருகின்றது. நாம் செய்யாத குற்றங்களில் எம்மை சிக்க வைக்க முயற்சித்து வருகின்றனர். இந்த அரசாங்கதின் உண்மைமுகம் இப்போது வெளிப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பாரிய நிதிமோசடி குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று காலை ஆஜராகியிருந்தார். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் இரும்புகளை துண்டுகளாக்கி விற்பனை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் ஊடாக அனுமதி வழங்கிய சம்பவம் தொடர்பிலான குற்றச்சாட்டு குறித்த விசாரணைகளுக்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார். சுமார் நான்கு மணிநேர விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது,
கடந்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றங்களில் இருந்து ராஜபக் ஷ குடும்பத்தினருக்கு மன்னிப்பு கொடுக்க வேண்டும் என சிலர் அநாவசிய கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இவர்களின் கருத்துக்களின் மூலமாக நாம் குற்றவாளிகள் என கூறவருகின்றமை தெரிகின்றது. எனினும் எனக்கு யாருடைய மனிப்பும் அவசியம் இல்லை. எனக்கு நியாயமான தீர்வே வேண்டும். நான் செய்யாத குற்றத்திற்காக என்னை குற்றவாளியென தெரிவித்து வருகின்றனர். இந்த நாட்டிற்காக நான் மிகப்பெரிய சேவையினை செய்துள்ளேன். இந்த நாட்டின் அமைதியை, சுதந்திரத்தை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். கடந்த காலத்தில் எவரும் செய்யாத சேவையினை நாம் எமது நாடு மக்களுக்காக செய்துள்ளோம். எனினும் இன்று நாமே குற்றவாளியென இந்த அரசாங்கம் கூறி வருகின்றது,
நான் ஒரு அரச அதிகாரியாக சேவை செய்துள்ளேன். நான் அரச அதிகாரியாக செயற்பட்ட காலத்தில் எந்தவொரு சொத்தையும் கைப்பற்றியுள்ளேனா? எமது பெயரில் எந்தவொரு தேயிலைத் தோட்டமும் இல்லை, ஒரு இறப்பர் தோட்டமும் எனது பெயரில் இல்லை. எந்தவொரு சட்டவிரோத சொத்துக்களும் இல்லை. ஹோட்டல்கள் எவையேனும் எனது பெயரில் உள்ளனவா? எந்தவொரு நிறுவனத்தின் பங்கும் எனது பெயரில் மாற்றப்பட்டுள்ளதா? ஊழல் வாதிகள் என்றால் இவ்வாறு ஏதேனும் இருக்க வேண்டும் அல்லவா. எமது பெயரில் கோடிக்கணக்கில் சொத்துகள் இருக்க வேண்டும், பொதுமக்களின் சொத்துக்கள் எம்மிடம் இருக்க வேண்டும். இராணுவ சொத்துக்கள் எமக்கு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாது நிதிமோசடி குற்றச்சாட்டு என்மீது எவ்வாறு சுமத்தப்பட்டுள்ளது என எனக்கு தெரியவில்லை. ஆனால் எனது பெயரில் இவ்வாறு எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லாது என்னை ஏன் குற்றவாளியாக்க பார்க்கின்றனர். எனக்கு நியாயமான தீர்வு அவசியமாகின்றது. அதையே நான் எதிர்பார்க்கின்றேன் மாறாக எவரதும் மன்னிப்பை நான் எதிர்பார்க்கவில்லை.
இன்று எமக்கு எதிராக தனிப்பட்ட அரசியல் பழிவாங்கல் இடம்பெற்று வருகின்றது. நாம் செய்யாத குற்றங்களில் எம்மை சிக்க வைக்க முயற்சித்து வருகின்றனர். என்னை கைதுசெய்யவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை நாடுகடத்தவும் இவர்கள் திட்டம் தீட்டியுள்ளனர் என அவர்களின் மூலமாகவே தகவல் கிடைத்துள்ளது. ஆகவே இந்த அரசாங்கத்தின் உண்மைமுகம் இப்போது வெளிப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM