நாட்டில் முன்னெடுக்கப்படும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை நிறுத்தினால் அது நாட்டின் வளர்ச்சிக்கே பெரும் பாதிப்பாக அமையும் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
அரசாங்கம் அபிவிருத்தியில் குளறுபடி செய்யும் வேளை எனது குடும்பத்தை பழிவாங்குகின்றது. எனது மகன்மார், சகோதாரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். ஆகவே இந்த வைராக்கியமான அரசியலை கைவிடுங்கள். அதுதான் நல்லது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
மாத்தறையில் நேற்று நடைபெற்ற நிகழ் வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மேலும் உரையாற்றுகையில்,
நாட்டில் முன்னெடுக்கப்படும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை நிறுத்துவதன் ஊடாக நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும். தற்போதைய பொருளாதார நெருக்கடி எதிர்காலங்களில் மேலும் அதிகரிக்கும். அபிவிருத்தி திட்டங்களுக்கு மக்களின் எதிர்ப்புகள் வருவது சகஜமாகும். எனினும் அதற்கான அபிவிருத்திகளை நிறு த்தினால் அது பெரும் பாரதூரமான சிக்கலாக மாறும்.
முன்னைய காலங்களில் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்பட்டு காலம் தாழ்த்தப்பட்டமையின் காரணமாக நாடு இன்னும் இந்த நிலைமையில் உள்ளது. எனினும் எனது ஆட்சிக்காலத்தில் அவ் வாறு காலம் கடந்த அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பித்து நிறைவு செய்தேன்.
ஆனால் தற்போதைய அரசாங்கம் அபிவிருத்தித் திட்டங்களை நிறுத்தி வருகின்றது. மின்கலம் உட்பட இயந்திரங்கள் இயங்காத வாகனமொன்றை ஒருவர் பெறும் போது அவர் அதனை கட்டியெழுப்புவது பெரும் சிரமமானதாக மாறும்.
இந்த அரசாங்கம் அபிவிருத்தியில் குளறு படி செய்யும் வேளை எனது குடும்பத்தை பழிவாங்குகின்றது. எனது மகன்மார், சகோ தரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட னர். ஆகவே இந்த வைராக்கியமான அரசி யலை கைவிடுங்கள். அதுதான் நல்லது என் றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM