புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள வழிநடத்தல் குழுவின் கூட்டம் நாளைய தினம் நடைபெற்றவிருந்த நிலையில் திடீரென இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற்கான வழிநடத் தல் குழுவானது இடைக்கால அறிக்கை வரைபை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கான பணிகளை துரிதப்படுத்துவதற்காக பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறாத நாட்களிலும் தொடர்ச்சியாக வழிநடத்தல் குழுவின் அமர்வுகளை நடத்துவதென கடந்த வாரம் இடம்பெற்ற அமர்வுகளின் போது ஏகோபித்த இணக்கத்திற்கு வரப்பட்டிருந்தது.
எனினும் தற்போது குறித்த இணக்கப்பாட்டின் படி நாளை முதல் தொடர்ச்சியாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அமர்வு தற்காலிகமாக நடைபெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் மகா சங்கத்தினர் விடுத்த அறிவிப்புக்களை அடுத்து சர்ச்சை நிலைமைகள் எழுந்துள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட முக்கிய அரசியல் தலைவர்கள் புதிய அரசியலமைப்பு உருவாக்கும் பணிகள் மக்கள் ஆணைக்கு ஏற்பட முன்னெடுக்கப்படும் என்று அழுத்தம் திருத்தமாக கூறிவருகின்றபோதும் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவான கூட்டு எதிர்க்கட்சியினர் மகா சங்கத்தினரின் தீர்மானத்திற்கு முரணாக செயற்படக்கூடாது என்று அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றனர்.
அதேநேரம் பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் கடந்த மாதம் 28 ஆம் திகதி நடைபெற்ற அரசியலமைப்பு மறுசீரமைப்பு மாநாட்டில் புதிய அரசியலமைப்பிற்கான இடைக்கால அறிக்கை வரைபு சமர்ப்பிக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டதாக தினேஷ் குணவர்த்தன எம்.பி. சபை யில் எழுப்பிய பிரச்சினையை அடுத்து இறுதியாக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற வழிநடத்தல் குழு கூட்டத்திலும் அதுகுறித்து கடுமையான வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றிருந்தன.
குறிப்பாக புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் பிரதான செயற்பாட்டாளரான ஜனாதிபதி சட்டத்தரணி கலா நிதி ஜயம்பதி விக்கிரமரட்ண எம்.பி.க்கும் தினேஷ் குண வர்த்தன எம்.பி.க்கும் இடையில் இவ்வாறான கருத்து மோதல் இடம்பெற்றிருந்த நிலையில் குறித்த அமர்விலும் தீர்க்கமான விடயங்கள் எதுவும் கலந்துரையாடப்படாது நிறைவுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM