டெங்கு நுளம்­பு­களை வேட்­டை­யாட வரு­கின்­றன "டொக்­ஸொரின் கைட்ஸ்" என்ற மிகப்­பெ­ரிய நுளம்­புகள்

Published By: Robert

10 Jul, 2017 | 10:06 AM
image

நாட்டில் தற்­போது டெங்கு நோயின் தாக்கம் கடு­மை­யாக அதி­க­ரித்­துள்ள நிலையில் அதனை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு பல்­வேறு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்ட போதிலும் டெங்கு  நோயா­ளர்­களின் எண்­ணிக்கை தொடர்ச்­சி­யாக உயர்ந்து கொண்டே  செல்­கி­றது. தற்­போ­தைய நிலை­மையில் நாட­ளா­விய ரீதியில் 80 ஆயிரம் டெங்கு நோயா­ளர் கள் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­துடன் 230 பேர் டெங்கு நோய் கார­ண­மாக உயி­ரி­ழந்­துள்­ளனர்.

அத்­துடன் வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் டெங்கு நோயா­ளர்கள் நிறைந்து காணப்­ப­டு­வ­துடன் இட நெருக்­க­டியும் ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந் நிலையில் டெங்கு நோயை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு அரசாங்கம் உரிய நட­வ­டிக்­கை­களை  எடுக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டுக் கள் பர­வலாக எழுந்­துள்ள நிலையில் அர­சாங்கம் புது­வி­த­மான திட்­ட­மொன்றை தற்­போது நாட்டில் அறி­மு­கப்­ப­டுத்­த­வுள்­ள­தாக தகவல் கள் தெரி­விக்­கின்­றன.

அதா­வது டெங்கு நுளம்­பு­களை உண­வாக எடுத்துக் கொள்ளும் மற்­று­மொரு உருவத்தில் பெரிய அள­வி­லான நுளம்பு வகையை சூழலில் உலாவ  விடு­வதன் மூலம் டெங்கு நுளம்பின் பெருக்­கத்தை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

இது தொடர்­பான பரி­சோ­த­னைகள் தற்­போது முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக  தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இது குறித்து மருத்­துவ ஆய்வு நிறு­வ­னத்தின்  சார்பில் வைத்­திய நிபுணர் சாக­ரிக்கா சம­ர­சிங்க சர்­வ­தேச ஊட­க­மொன்­றுக்கு இவ்­வாறு தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இந்தப் பரி­சோ­தனை மிகவும் பர­ப­ரப்­பின்றி மௌன­மான முறையில் முன்­னெ­டுக்கப்­ப­டு­கி­றது. இதில் நாங்கள் விளம்­ப­ரத்தை தேட­வில்லை. நாம் பரி­சோ­த­னையின் நிமித்தம் இந்த நுளம்­பு­களை பல்­வேறு பிர­தே­சங்களில் உலாவ விட்டோம். இரு­ளுக்கு சாபம்­வி­டாமல் மெழுகு திரி­யொன்­றை­யா­வது கொளுத்த வேண்டும் என்ற எண்­ணக்­க­ருவின் அடிப்­ப­டை­யி­லேயே இதனை நாங்கள் முன்­னெ­டுக்­கின்றோம். நீண்­டகால ரீதியில் டெங்கு நுளம்­பு­களை அழிப்­ப­தற்கு இது ஒரு சிறந்த முறை­யாகும். இந்த மிகப்­பெ­ரிய நுளம்பின் பெயர் "டொக்­ஸொரின் கைட்ஸ்" ஆகும். இந்த நுளம்பு உரு­வாகி ஆரம்ப காலத்தில் மட்­டுமே டெங்கு நுளம்­பு­களை உண­வாக உட்கொள்ளும்.  

அதன் பின்­னரும் கூட மனி ­தனின் இரத்­தத்தை உறிஞ்­சாது.  மாறாக பூவி­லுள்ள தேனை உறிஞ்­சிக்­கு­டிக்கும். அத்­துடன் இலை போன்­ற­வற் றையே உட்­கொள்ளும். நுளம்­பு­களை கொல்லும் நுளம்பு என்றே இதனை ஒரு­சிலர் அறி­மு­கப்ப­டுத்­து­கின்­றனர். இதனால் ஒரு­போதும் மனி­தனை குத்தி இரத்­தத்தை குடிக்க முடி­யாது. காரணம் அதன் கொடுக்­கா­னது முன்­பக்­க­மாக வளர்ந்து பின் பக்கம் திரும்­பி­யி­ருக்கும்.  எனவே அதனால் மனி­தனைகுத்தி இரத்­தத்தை குடிக்க முடி­யாது என்று வைத்­திய நிபுணர்   பீ.பீ.சி. செய்திச் சேவைக்கு கூறி­யி­ருந்தார். 

தற்­போது இந்த நுளம்­புகள் பேரா­தனை தாவ­ர­வியல் பூங்கா, மீரி­கம குண்­ட­சாலை ஆகிய பிர­தேச சூழல்­களில் உலா­வ­வி­டப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

""எப்­ப­டி­யி­ருப்­பினும் இந்த நுளம்­பு­க­ளி­லி­ருந்து மட்டும் நாம் டெங்கு நுளம்­பு­களை அழித்து விட முடி­யாது. எமது சுற்றுச் சூழலை சுத்­த­மாக வைத்­தி­ருப்­பதன் மூலமும் டெங்கு நுளம்­புகள் பரவும் இடங்­களை அழிப்­பதன் மூல­முமே கட்­டுப்­ப­டுத்த முடியும். இதனை மக்கள் மனதில் கொள்ள வேண்­டி­யது அவ­சியம்"  என்றும்  மருத்­துவஆய்வு நிறு­வ­னத்தில் சார்பில் வைத் திய நிபுணர் சாக­ரிக்க சம­ர­சிங்க குறிப்­பிட்­டி­ருக்­கிறார். 

இதே­வேளை இது தொடர்பில் சுகா­தார அமைச்சர் ராஜித சேனாரட்ன கேசரிக்கு தகவல் தரு­கையில்,

எமது மருத்­துவ ஆய்வு நிறு­வனம் இது தொடர்பில் பரி­சோ­தனை செய்து வருகி­றது. இந்த மிகப்­பெ­ரிய அள­விலான நுளம்­பா­னது இலைகளை உணவாக உட்கொள்­வ துடன் பூக்­களிலுள்ள தேனை உறிஞ்­சிக்­கு­டிக்கும். அதன்­ பின்னர் இந்த பெரிய நுளம்­புகள் மேலும் நுளம்­பு­களை உற்­பத்தி செய்யும் அவ் வாறு உற்­பத்தி செய்­யப்­படும் நுளம்­புகள் தமது வாழ்க்­கையின் ஆரம்ப கட்டத்தில்

டெங்கு நுளம்­பு­களை உண­வாக உட்­கொள்ளும். எனவே இதன் மூலம் டெங்கு நுளம்­பு­களை கட்­டுப்­ப­டுத்த முடி யும். 

கேள்வி : இந்த நுளம்­புகள் மனி­தனின் இரத்­தத்தை குடிக்­காதா?

பதில் : இல்லை. ஆய்­வு­களின் மூலம் இந்த நுளம்­புகள் மனி­தனை குத்தி இரத்­தத்தை உறிஞ்­சாது என்­பது   உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 

கேள்வி : வேறு நாடு­களில் இந்த முறைமை பின்­பற்­றப்­ப­டு­கின்­றதா?

பதில் :    ஐரோப்­பிய நாடுகள் உள்­ளிட்ட  பல்வேறு நாடுகளில் இந்த முறைமை பின்பற்றப்பட்டு வருகிறது. இது  வெற்றியும் அளித்துள்ளது.

கேள்வி : தற்போது இந்த நுளம்புகளை அரசாங்கம் நாட்டின் பல்வேறு இடங்களிலும் உலாவவிட்டுள்ளதா?

பதில் : உத்தியோகபூர்வமாக இதுவரை உலாவ விடவில்லை.  எனினும் பரிசோதனை முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

கேள்வி : இந்த நுளம்புகள் வெளிநாடுக ளிலிருந்தா கொண்டுவரப்படுகின்றன?

பதில் : அவ்வாறு தான் முதலில் எண்ணி னோம்.  ஆனால் சிங்கராஜ வனத்தில் தேவைக்கு அதிகமாகவே இந்த நுளம்புகள்  காணப்படுகின்றன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16