பாரிஸிலுள்ள பற்றாகிலன் அரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை தீவிரவாத குழுவைச் சேர்ந்த துப்பாக்கிதாரிகள் நடத்திய சூட்டின் போது இரு கால்களும் காயமடைந்த பெண்ணொருவர் தனது முன்னாள் காதலரின் உயிரைக் காப்பாற்றப் போராடிய நெஞ்சை நெகிழவைக்கும் சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சொந்த இடமாகக் கொண்ட ஹெலன் வில்ஸன் (49 வயது) என்ற மேற்படி பெண் பிரித்தானியாவைச் சேர்ந்த நிக் அலெக்ஸாண்டர் (36 வயது) என்ற குறிப்பிட்ட நபரை பல வருட காலமாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நிக்கிற்கு பிரித்தானியாவைச் சேர்ந்த பொலினா பக்லி என்ற பெண்ணுடன் காதல் தொடர்பு ஏற்பட்டதையடுத்து அவர்களிடையேயான உறவு முறிவடைந்தது.
எனினும் நிக் மீதான காதலை மறக்க முடியாத நிலையில் ஹெலன் இருந்துள்ளார்.
இந்நிலையில் நிக்கும் ஹெலனும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பற்றாகிலன் அரங்கில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது ஒருவரையொருவர் சந்திக்க நேர்ந்தது.
மேற்படி நிகழ்ச்சியில் தீவிரவாத குழுவைச் சேர்ந்த துப்பாக்கிதாரிகள் நடத்திய சூட்டில் ஹெலன் இரு கால்களும் காயமடைந்து நடக்க முடியாத நிலைக்கு உள்ளானார்.
துப்பாக்கிதாரிகள் எழுந்து ஓடுவதற்கு முயற்சிக்கும் அனைவர் மீதும் துப்பாக்கிச் சூட்டை நடத்துவதில் ஈடுபட்டிருந்தனர்.
நிக்கும் ஹெலனும் இறந்தது போன்று பாசாங்கு செய்து உயிர் தப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்
இந்நிலையில் நிக்கின் அருகிலிருந்த ஒருவர் எழுந்து ஓட முயற்சிக்கவும் அவர் மீது துப்பாக்கிதாரிகள் சூட்டை நடத்தியுள்ளனர்.
இதன் போது துப்பாக்கி ரவைகள் நிக்கின் உடலை ஊடுருவிச் சென்றுள்ளன.
துப்பாக்கிதாரிகள் பார்வையிலிருந்து மறைந்ததும் ஹெலன் அங்கிருந்து தப்பியோடுவதற்கு முயற்சிக்காமல் முன்னாள் காதலரின் உயிரைக் காப்பாற்ற முயற்சித்துள்ளார். அவர் நிக்கின் தலையை தனது மடியில் தாங்கி அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்க முயன்றார்.
எனினும் கடும் காயத்துக்குள்ளாகியிருந்த நிக்கை காப்பாற்ற அவரால் முடியவில்லை.
மேற்படி தாக்குதலில் காயமடைந்த இரு அமெரிக்கப் பிரஜைகளில் ஹெலனும் ஒருவராவார்.
அமெரிக்க மாணவரான நொஹெமி கொன்ஸாலெஸ் (23 வயது) இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM