இராவணனின் மாளிகையை பார்க்க நிலத்திற்கு கீழ் 3000 அடி வரை சென்ற தேரர் ; பேஸ்புக் பதிவில் வெளியிட்ட தகவல்

09 Jul, 2017 | 07:45 PM
image

இராமாயண வரலாற்றில் புகழ் பெற்ற இலங்கையின் மூத்த மன்னனும் மூத்த தமிழ்க் குடியின் தலைவனுமான இராவணனின் மாளிகை ஒன்று கற்குகை ஒன்றினுள் அமைந்திருப்பதாகச்  சொல்லப்படும் நிலையில், முதல் முறையாக பௌத்த தேரர் ஒருவர் அங்கே சென்று திரும்பி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அந்த தேரர் தனது பேஸ்புக் கணக்கில் பதிவென்றை பதிவேற்றம் செய்துள்ளார். 

இந்த சுரங்கப் பாதையானது பாரிய அடர்ந்த காட்டுக்கு மத்தியில் உள்ளதனால் அந்தப் பிரதேச மக்களின் உதவி இல்லாமல் அங்கே செல்ல முடியாது. 

இருள் படர்ந்த அதைப் பார்த்தவுடன் மிகுந்த பயம் ஏற்படும்.நில்திய பொக்குன என்று சொல்லப்படும் இராவணின் மாளிகை நிலத்திற்கு கீழேயே அமைந்துள்ளது.

எல்ல வெல்லவாய பாதையில்  கரதகொல்ல பாடசாலைக்கு பக்கத்தில் செல்லும் வீதியிலிருந்து ஒன்றரை கிலோ மீற்றர் தூரம் உள்ளே செல்லும் போது இந்த சுரங்கப் பாதைக்கு செல்ல முடியும்.

முதலில் கயிற்றின் உதவியுடனேயே இங்கு செல்ல முடியும். கயிற்றைப் பிடித்து சுமார் 40 அடி தூரம் இறங்க வேண்டும். பின்னர் சிறிய அறை ஒன்று அங்கே காணப்படும். பின்னர் அங்கிருந்து மேலும் 30 அடி கயிற்றின் உதவியுடன் கீழே இறங்க வேண்டும். அதன்பின்னர் 500 மீற்றர் தூரம் வரையான சாய்வுப் பகுதியில் நடந்து சென்றால் நல்ல விசாலமான மண்டபம் ஒன்றினைக் காண முடியும்.

அந்த மண்டப சுவரின் அடுத்தபக்கத்துக்குச் சென்று பின்னர் அங்கிருந்து 700 - 800 அடிவரை கீழே இறங்கும் போது பேச்சு அரங்கு போன்ற ஒன்றை காணலாம்.அங்கே நீர் வீழ்ச்சி ஒன்றின் சத்தம் கேட்டு கொண்டிருக்கின்றது. அதில் இருந்து மேலும் 1500 அடி தூரம் செல்லும் போது நீல நிறக் குளம் ஒன்று காணப்பட்டது.

சூரிய ஒளியைக் கண்டிராத இந்த இடத்தில் மிகவும் சுத்தமான நீர் எங்கிருந்து வந்தது என்பதனை கண்டுபிடிக்க முடியவில்லை.

அந்த குளத்திற்கு அருகில் மிகவும் அலங்காரமிக்க மாளிகை ஒன்று அமைந்துள்ளதாக என்னோடு  வந்த கிராமவாசி தெரிவித்தார்.ஆனாலும் அது ஆபத்தான பகுதி என்று நினைத்து திரும்பிவிட்டோம் என்று குறித்த தேரர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08