எல்லைத்தாண்டும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையிலான இலங்கை அரசின் புதிய சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து இன்று முதல் தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது எல்லை தாண்டி வந்ததாகவும், போதை பொருட்களை கடத்துவதாகவும் கூறி இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை சிறைபிடித்து செல்வதும், தாக்குவதும், விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் எல்லை தாண்டி இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கும் சட்டத்தில் இலங்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தமிழக மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ராமேசுவரம் துறைமுகத்தில் மீனவர்கள் சங்கத்தினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலங்கை பாராளுமன்றத்தில் தமிழக மீனவர்களுக்கு ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கும் சட்டத்தை நீக்க மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்றும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் மற்றும் படகுகளையும் விடுவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை ராமேசுவரத்தில் இன்று முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் 14 ஆம் திகதி தீக்குளிக்கும் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM