மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் ஊழல் செயற்பாடுகள் இன்றும் தொடர்கின்றன. எனவே ஊழல் செயற்பாடுகளை விசாரணை செய்ய தனியான நீதிமன்ற பிரிவொன்று நிறுவப்பட வேண்டும் என ஊழல் எதிர்ப்பு முன்னணி தெரிவிக்கின்றது.
மாத்தறை – மத்தள அதிவேக வீதிக்கு கடந்த அரசாங்கம் செலவிட்ட தொகையினை விடவும் தற்போதைய அரசாங்கம் அதிகளவு செலவிடுவதாக அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அகலங்க ஹெட்டியராச்சி குற்றம் சாட்டினார்.
ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் அதிவேக வீதி நிர்மாணிப்பு பணிகளின் போது ஊழல் பண மோசடி இடம்பெற்றதாக கூறப்பட்டது. அவ்வாறான மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே நல்லாட்சி ஒன்றினை உருவாக்க மக்கள் வாக்களித்தனர்.
ஆனால் மக்கள் ஆணைக்கு முரணாக செயற்படும் இன்றைய அரசாங்கமும் ஊழல் எதிர்ப்பு செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. மாத்தறை – மத்தள - அதிவேக வீதியின் பணிகளிலேயே இவ்வாறான மோசடிகள் இடம்பெறுகின்றன.
கடந்த ஆட்சியில் இந்த 96 கிலோ மீற்றர் தூரத்திலான இந்த அதிவேக பாதையினை 242 பில்லியன் செலவில் அமைக்க திட்ட மிட்டிருந்தனர். அதற்கான ஆலோசகர்களுக்கு 12 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த அதிவேக வீதி நான்கு கட்டங்களாக நிர்மாணிக்கப்பட தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதன் பணிகள் சீன நிறுவனம் ஒன்றுக்கு பொறுப்பளிக்கப்பட்டிருந்தன. எவ்வாறாயினும் இத்திட்டத்திற்கான செலவுகள் அளவை குறிப்பிட்டு தயாரிக்கப்பட்ட குறை நிரப்பு பிரேரணையிலடங்கியுள்ள விடயங்கள் உண்மைக்கு புறம்பானவையாகும்
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் அதன் முதலாவது பெருந்தெருக்கள் அமைச்சராக கபீர் ஹாசீம் நியமிக்கப்பட்டார். அவர் எம்.பீ.எஸ் பிரனாந்து தலைமையில் நியமிக்கப்பட்ட பொறியியலாளர் குழுவிற்கு மேற்குறிப்பிட்ட அதிவேக வீதிக்கான குறை நிரப்பு பிரேரணையை மீள ஆராயுமாறு பணித்தார்.
2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதியன்று அமைச்சருக்கு இது குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் கடந்த அரசாங்கம் மேற்படி அதிவேக வீதியை அமைப்பதற்கான பணிகளுக்கு செலவாகும் பணத்தினை விடவும் 40 வீதம் அதிகமாக இட்டே குறை நிரப்பு பிரேரணையை தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் அதிவேக வீதி நிர்மாண பணிகளுக்காக 123 பில்லியன் ரூபாவினை செலவிட்டால் மாத்திரம் போதுமானது எனவும் அக்குழு அறிவுறுத்தியிருந்தது. இருப்பினும் தற்போதைய அரசாங்கம் கடந்த அரசாங்கம் செலவிட்ட தொகையையே செலவிட்டு இந்த வீதி நிர்மாண பணிகளை முன்னெடுப்பது கசப்பான உண்மையாகும்.
எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் ஊழல் தொடர்பில் ஆராயும் நிறுவனங்களை தன்னிடத்தில் தந்தால் 3 மாதங்களில் பெருந்தொகையானோரை கூண்டில் ஏற்றுவதாக கூறியிருந்தார்.எனவே ஊழல் செயற்பாடுகளை விசாரணை செய்வதற்கு நீதிமன்றத்தில் தனியான ஒரு அலகை நிறுவி அதன் கீழ் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்லுமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM