பஸ்ஸுக்குள் மனைவியிற்கும் கள்ளக் காதலனிற்கும் கத்திக்குத்து ; தலைமறைவான கணவர் கைது

07 Jul, 2017 | 12:41 PM
image

தனது கணவன் மற்றும் பிள்­ளை­களை விட்­டு­விட்டு கள்­ளக்­கா­த­ல­னுடன் தப்பிச் சென்ற பெண் மீதும் அவ­ரது கள்ளக் காதலன் ஆகியோர் மீது கத்­திக்­குத்து மேற்­கொண்ட நபர் பொல்­பித்­தி­கம பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்­படி சம்பவத்தில் பெண்ணின் சட்­ட­ரீ­தி­யான கண­வ­னா­லேயே அப்பெண் மீதும் அவ­ரது கள்ளக் காத­லலன் மீதும் இவ்­வாறு கத்­திக்­குத்து நடத்­தப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. இவ்­வாறு கத்­திக்­குத்­துக்கு இலக்­கா­ன­வர்கள் கல்­னேவ, அவுக்­கன பிர­தே­சத்தை சேர்ந்த 33 வய­தான பெண்ணும்  35 வய­தான திரு­ம­ண­மா­காத  அவ­ரது கள்ளக் காத­லனும் என தெரியவந்­துள்­ளது.

இப்­பெண்ணின் சட்­ட­ரீ­தி­யான கண­வரால் கடந்த 30 ஆம் கல்­னேவ பொலிஸ் நிலை­யத்தில் செய்­யப்­பட்ட முறைப்­பா­டொன்றின் விசா­ர­ணை­க­ளுக்­காக குறித்த பெண்ணும் அவ­ரது கள்­ளக்­கா­த­லனும் பொலிஸ் நிலை­யத்­துக்கு வந்துள்ளனர்.

விசா­ர­ணைகள் முடி­வ­டைந்த பின்னர் இந்த ஜோடி கல்­னே­வ­வி­லி­ருந்து குரு­ணாகல் நோக்கி பஸ்ஸில் பய­ணித்­து கொண்டிருக்கையில், அப்­பெண்ணின் சட்­ட­ரீ­தி­யான கணவர் சாலி­ய­கம பிர­தே­சத்தில் வைத்து குறித்த பஸ்ஸின் முன்­பக்க கதவின்  ஊடாக உள்­நு­ழைந்து பஸ்­ஸினுள் அமர்ந்­தி­ருந்த தனது மனை­வி­யையும் அவ­ளது கள்­ளக்­கா­த­ல­னையும் கூரிய ஆயு­தத்­தினால் சர­மா­ரி­யாக வெட்­டிக்­கா­யப்­ப­டுத்­தி­யுள்ளார். 

இச்­சம்­ப­வத்தில் பெண்ணின் தலைப்­ப­கு­தி­யிலும் முழங்­கா­லிலும் காயம் ஏற்­பட்­ட­தோடு அவ­ரது கள்­ளக்­கா­த­ல­னுக்கு தோற்­பட்டை மற்றும் கால்­களில் வெட்­டுக்­கா­யங்கள் ஏற்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

காய­ம­டைந்த இரு­வரும் அவர்கள் பய­ணித்த பஸ்­ஸி­லேயே பொல்­பி­தி­கம வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்து செல்­லப்­பட்­டனர். பின்னர் அங்­கி­ருந்து அவர்கள் இரு­வரும் மேல­திக சிகிச்­சை­க­ளுக்­காக குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டனர்.

இச்­சம்­பவத்தில் பெண்ணின் சட்டரீதியான கணவர் கல்னேவ பிரதேசத்தில் தலைமறைவாகியிருந்த நிலையில்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பொல்பிதிகம பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசார ணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:20:29
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:22:40
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54