புற்றுநோய்க்கு அளிக்கப்படும் இரசாயன சிகிச்சையானது அந்நோய் தீவிரமாக பரவி மேலும் அபாயகரமாக மாறுவதற்கு வழிவகுக்கலாம் என புதிய ஆய்வொன்று உரிமை கோருகிறது.
மேற்படி இரசாயன சிகிச்சையானது புற்றுநோய் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்கான முதலாவது சிகிச்சைத் தெரிவாகவுள்ளது.
ஆனால் அமெரிக்க நியூயோர்க் நகரிலுள்ள அல்பேர்ட் அயன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட புதிய ஆய்வில் அந்த சிகிச்சை புற்றுநோயாளர்களுக்கு குறுகிய கால அளவில் மட்டுமே பயன் அளிப்பதாக உள்ளமைக்கான சான்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த இரசாயன சிகிச்சை புற்றுநோய் கட்டிகள் குருதிச் சுற்றோட்ட முறைமையினூடாக திரும்பவும் பலம் பெற்று வேகமாகப் பரவுவதற்கு வழிவகை செய்வதாக இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய மருத்துவ கலாநிதி ஜோர்ஜ் கராகியன்னிஸ் தெரிவித்தார்.
மேற்படி ஆய்வின் முடிவுகள் நேற்று முன்தினம் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.
புற்றுநோயானது சிகிச்சையளிப்பதற்கு கடினமான நோயாகவுள்ளது. அது ஏனைய உடல் உறுப்புகளுக்குள் பரவுகையில் நான்காம் கட்ட அபாய நிலையை அடைந்து சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலை உருவாகிறது எனத் தெரிவித்த கலாநிதி ஜோர்ஜ் கராகியன்னிஸ், தமது ஆய்வின் பெறுபேறுகளின் பிரகாரம் புற்றுநோயாளர்களுக்கு இரசாயன சிகிச்சையை வழங்குவதை நிறுத்துவதற்கு தாம் சிபாரிசு செய்யவில்லை எனவும் ஆனால் அந்த சிகிச்சையை வழங்கும் போது நோயாளியின் உடலில் புற்றுநோய் கட்டிகள் அடையும் மாற்றங்கள் குறித்து தீவிர கண்காணிப்பை மேற்கொள்வது அவசியமாகவுள்ளது எனவும் கூறினார்.
புற்றுநோய்க் கட்டிகளை முழுமையாக அழிப்பதற்கு வழங்கவேண்டிய இரசாயன மருந்தின் செறிவானது நோயாளியின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது என்பதால் மருத்துவர்கள் குறைந்த செறிவிலேயே அந்த மருந்தை வழங்குகின்றனர் எனவும் இது அந்தப் புற்றுநோய்க் கலங்கள் வேகமாக பரவவும், இந்த அரைகுறை சிகிச்சையில் உயிர் பிழைத்திருக்கும் புற்றுநோய்க் கலங்கள் இர சாயன சிகிச்சைகளுக்கு ஈடுகொடுத்து உயிர் பிழைத்திருக்கக் கூடிய நிலையை அடைந்து ஏனைய உடல் உறுப்புகளுக்கு பரவும் அபாயமிக்க நிலையை அடையவும் வழிவகை செய்வதாக அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM