றக்பி சுப்பர் – 7 போட்டித் தொடர் நாளை கண்டியில் ஆரம்பமாகவுள்ளது. கடந்த வருடத்தை விட இவ்வருடம் சற்று முன்னேற்றம் கண்டுள்ள றக்பி சுப்பர் – 7 போட்டித் தொடரில் ஒரு அணி மூன்று வெளிநாட்டு வீரர்களை கொண்டிருக்க முடியும். ஆனால் ஆடும் அணியில் 2 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் முதலாம் நாளான நாளை 8 அணிகளும் முதல் சுற்றில் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும். இரண்டாம் நாளில் நொக் அவுட் போட்டிகள் நடைபெறவுள்ளதோடு, கோப்பை, பிளேட், போல் மற்றும் ஷீல்ட் ஆகிய கிண்ணங்களுக்காக அணிகள் மோதும்.
மேலும், அணிகள் சென்ற வருடம் விளையாடிய வீரர் ஒருவரை மீண்டும் தன்னிடம் வைத்துக்கொள்ள முடியும். 3 வெளிநாட்டு வீரர்களை அணியில் சேர்த்துக்கொள்ளலாம்.
23 வயதிற்குட்பட்ட வீரர் ஒருவர் கட்டாயம் களத்தில் விளையாட வேண்டும் என்பதோடு, ஒரே நேரத்தில் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே களத்தில் விளையாடலாம்.
இத்தோடு 16 மற்றும் 18 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கான போட்டிகளும் நடைபெறவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM