இலங்கை கால்பந்தாட்ட வரலாற்றில் அதி உயிரியதும் உன்னதம் வாய்ந்ததுமான எவ். ஏ. கிண்ண நீக்கல் முறை (நொக்-அவுட்) கால்பந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் 21ஆம் திகதி தகுதிகாண் சுற்றுடன் ஆரம்பமாகவுள்ளன.
இப் போட்டிகளுக்கு கார்கில்ஸ் நிறுவனம் தொடர்ந்தும் அனுசரணை வழங்கிவருவதால் இப் போட்டிகள் கார்கில்ஸ் புட்சிட்டி எவ். ஏ. கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் என அழைக்கப்படுகின்றது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் ஆரம்பித்து இவ் வருடம் ஜூலை மாதம்வரை நடத்தப்பட்ட முறைமைப்படி இம்முறையும் நடத்தப்படவுள்ள கார்கில்ஸ் எவ். ஏ. கிண்ணப் போட்டிகளில் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் 500 க்கும் மேற்பட்ட கழகங்கள் பங்குபற்றவுள்ளன.
2013இல் 174 கழகங்கள் மாத்திரம் பங்குபற்றியபோதிலும் கடந்த வருடம் 628 கழகங்கள் பங்குபற்றி இலங்கையின் எவ். ஏ. கிண்ண வரலாற்றில் சாதனை ஒன்ற நிலைநாட்டப்பட்டது. நாடு முழுவதும் கால்பந்தாட்டத்தை வியாபிக்கச் செய்யவெண்டும் என்ற கார்கில்ஸ் நிறுவனத்தின் உதவி அதிபர் றிச்சர்ட் பேஜ் மற்றும் அப்போதைய இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ரஞ்சித் ரொட்றிகோ ஆகியோரின் குறிக்கோளுக்கு அமையவே கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
கடந்த வருடம் முதல் தடவையாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்தும் பத்துக்கும் மேற்பட்ட கழகங்கள் பங்குபற்றியிருந்தன. இவ் வருடமும் அதே எண்ணிக்கை கழகங்கள் விளையாடும் என எதிர்பார்கப்படுகின்றது.
கடந்த வருடம் போன்றே இவ் வருடமும் கடைசி 32 அணிகள் பகிரங்க குலுக்கல் மூலம் அட்டவணைப்படுத்தப்படும்.
இவ் வருடம் 24 அணிகள் நிரல்படுத்தப்பட்டுள்ளதுடன் எட்டு வலயங்களில் முதலிடங்களைப் பெறும் அணிகளும் இந்த 24 அணிகளுடன் இணைக்கப்பட்டு பகிரங்க குலுக்கல் நடத்தப்படும் எனத் தெரியவருகின்றது.
நடப்பு சம்பியன் கலம்போ எவ். சி., கடந்த முறை இரண்டாம் இடத்தப் பெற்ற களுத்துறை புளூ ஸ்டார், இராணுவம், கடற்படை, சோண்டர்ஸ், சொலிட், அப்கன்ட்றி லயன்ஸ், மாத்தறை சிட்டி, றினோன், ஜாவா லேன், ஹைலேண்டர்ஸ், யாழ். சிங்கிங் ஃபிஷ், மன்னார் செய்ன்ற் ஜோசப், பொலிஸ், விமானப்படை, பாணந்துறை நியூ ஸ்டார் ஆகிய கழகங்கள் நேரடியாக கடைசி 24 அணிகளில் 16 அணிகளாக இடம்பெறும். டொன் பொஸ்கோ ஒரு வருடத் தடைக்குட்பட்டுள்ளதால் கடந்த வருடம் 32 அணிகள் சுற்றில் சிறந்த தொல்வியைத் தழுவிய நியூ ஸ்டார் 16ஆவது அணியாக ஈர்க்கப்பட்டுள்ளது.
சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் பங்குபற்றிய கழங்களும் 24 அணிகளுக்குள் இணைய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் நிகம்போ யூத், வென்னப்புவை நியூ யங்ஸ், களுத்துறை பார்க், க்றிஸ்டல் பெலஸ், பெலிக்கன்ஸ், திஹாரிய யூத், சுப்பர் சன், நந்திமித்ர ஆகிய கழகங்களும் 24 அணிகளில் நிரல்படுத்தப்பட்டுள்ளன.
இப் போட்டிகளில் சம்பியனாகும் அணிக்கு கார்கில்ஸ் ஃபுட் சிட்டி எவ். ஏ. கிண்ணத்துடன் 5 இலட்சம் ரூபா பணப்பரிசும் தங்கப் பதக்கங்களும் வழங்கப்படும். இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு வெள்ளிப் பதக்கங்களுடன் 250,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM