யாழ்.தீவக பகுதிகளில் சட்டத்திற்கு மாறாக கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்திருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இவ்வாறான சம்பவத்தை உடனடியாக தடுத்து நிறுத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ் விடயம் தொடர்பில் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
யாழ்.தீவக பகுதிகளில் குறிப்பாக புங்குடுதீவு மற்றும் வேலணை பகுதிகளில் சட்டத்திற்கு மாறாக கால் நடைகளை இறைச்சிக்காக வெட்டும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
புங்குடுதீவை பொறுத்தளவில் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களே அதிகம் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். மேலும் பெருமளவில் கட்டாக்காலி கால்நடைகளும் காணப்படுகின்றன.
இவற்றை விசமிகள் சிலர் பிடித்துச் சென்று பற்றைகளுக்குள் வைத்து சட்டவிரோதமாக இறைச்சிக்காக வெட்டும் சம்பவங்கள் நாளாந்தம் இடம்பெறுகின்றது. குறிப்பாக பசுமாடுகளும் கூட வெட்டப்பட்டு இறைச்சி தீவகத்திற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டு கொண்டிருக்கின்றது. இது தொடர்பாக பிரதேச செயலகம் மற்றும் பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டபோதும் போதுமான அளவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதேவேளை புங்குடுதீவை சேர்ந்த இளைஞர்கள் கட்டாக்காலி கால்நடைகளை பிடித்து ஒரு இடத்தில் பட்டி அமைத்து பராமரிப்பதற்கும் அவற்றிலிருந்து பயனை பெற்று தீவக பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்திருந்தபோது அது மக்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு குழப்பங்கள் உருவாகியிருக்கின்றது.இவ்வாறன நிலையில் அத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
பெருமளவு கால்நடைகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டு வருகின்றமையினை தடுத்து நிறுத்துவதற்கான ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் இதுவரை எவராலும் முன்னெடுக்கப்படவில்லை.இளைஞர்களும்,சமூக அமைப்புக்களும் தடுக்க நினைக்கும்போது அதற்கு எதிராக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதனால் எந்த எதிர்ப்பும் இல்லாமல் கால்நடைகள் வேட்டையாடப்படுகின்றன.
எனவே இவ்வாறான நடவடிக்கைகளை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குரிய நடவடிக்கைகள் தேவை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM