அமெரிக்காவில் 13 பேரை மட்டுமே சனத்தொகையாகக் கொண்ட சிறிய பிராந்தியமான மொலோஸியாவானது தன்னை ஒரு தனி நாடாக பிரகடனப்படுத்திக் கொண்டு தனக்கென சொந்த நாணயம் , சட்டங்கள், கடவுச்சீட்டு மற்றும் அடையாளம் என்பவற்றை உள்ளடக்கி செயற்பட்டு வருகிறது.
தனிநாடாக தன்னைத் தானே சுய பிரகடனம் செய்து கொண்டுள்ள அந்நாட்டின் 40 ஆவது ஆண்டு விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
மேற்படி பிராந்தியத்தை அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் ஒரு நாடாக
அங்கீகரிக்காத போதும் அந்தப் பிராந்திய மக்கள் அதைப்பற்றி சிறிதும் கவலைப் படாமல் தமது பிராந்தியத்தை இறை மையுள்ள தனிநாடாகவே கருதுகின்றனர்.
அந்தப் பிராந்தியத்தை தனிநாடாக சுய பிரகடனம் செய்த அதன் ஆட்சியாளரான கெவின் போக் (54 வயது), தான் சர்வாதிகார ஆட்சியாளர் ஒருவராக விளங்குவதில் விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
சுய நாடாக பிரகடனம் செய்து கொண்ட போதும் மேற்படி பிராந்தியம் அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்துக்கு வரி செலுத்தி வருகிறது. அந்த வரியை மொலோஸியா மக்கள் தம்மால் வழங்கப்படும் வெளிநாட்டு உதவியொன்றாகவே கருதுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM