ஊழல் தொடர்பான விசாரணை திணைக்களங்களை மூன்று மாதங்களுக்கு ஜனாதிபதியிடம் ஒப்படைத்தால் இந்த ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் எல்லாவற்றையும் அவர் முடிவுக்குக் கொண்டுவருவார். இதுதொடர்பில் அமைச்சரவையில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.
பில்லியன் கணக்கில், கோடிக்கணக்கில் ஊழல் செய்த கடந்த ஆட்சியாளர்கள் சுதந்திரமாக இருக்கும் பொழுது விசாரணைத் திணைக்களங்களோ, சிறு சிறு விடயங்களை கையில் எடுத்துக்கொண்டு விசாரித்துக்கொண்டிருக்கின்றன. கடந்த ஆட்சியில் இடம்பெற்ற நிதி ஊழல்கள், கொலைகள் அனைத்தும் எமக்குத் தெரியும். ஆனால் எந்த நடவடிக்கையும் இடம்பெறாமல் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்:
கேள்வி: அமைச்சரவைக் கூட்டம் மிகவும் சூடாக இருந்ததாமே?
பதில்: அப்படி இல்லை. அமைச்சரவை அலுவலகம் குளிரூட்டப்பட்டுள்ளது. எனவே சூடாக இருக்கவில்லை. மிகவும் குளிராக இருந்தது.
கேள்வி: ஊழல் நடவடிக்கை விசாரணை தொடர்பில் சூடாக பேசப்பட்டதாமே?
பதில்: அது தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. குறிப்பாக நிதிக் குற்றப்புலனாய்வு, ஊழல் விசாரணை செயலகம் என்பன செயற்படும் விதம் தொடர்பில் தனக்கு திருப்தி இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்றுக்கொண்டார். அதாவது மிகப்பெரிய அளவிலான ஊழல் மோசடி சம்பவங்கள், திருட்டுகள், கொலைகள் கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ளன. ஆனால் சிறுசிறு விடயங்கள் தொடர்பிலேயே விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இராஜாங்க அமைச்சர் பௌசி கார் ஒன்றை ஒரு அமைச்சிடமிருந்து இன்னொரு அமைச்சுக்கு கொண்டு சென்றமை தொடர்பாக விசாரிக்கப்படுகின்றது.
ஆனால் மிகப்பெரிய ஊழல்கள் தொடர்பில் விசாரணை நடைபெறுவதில்லை. உதாரணமாக ஊழல் விசாரணை செயலகம் ஒன்று உள்ளது. அதில் ஆறு விசாரணையாளர்கள் உள்ளனர். ஒரு விசாரணை ஆலோசகர் உள்ளார். ஐந்து ஆலோசகர்களும் ஐந்து பணிப்பாளர்களும் உள்ளனர். குறைந்தபட்சம் விசாரணையாளர்களின் எண்ணிக்கையாவது அதிகமாக இருக்கலாமே. அதுமட்டுமின்றி மாதமொன்றுக்கு 12 மில்லியன் ரூபா செலவும் இடம்பெறுகிறதாம். முடிவில் சிறிய சம்பவங்கள் தொடர்பிலேயே விசாரணைகள் இடம்பெறுகின்றன. என்ன நடக்கின்றது என்றே புரியவில்லை.
கேள்வி: பிரதமரின் நிலைப்பாடு எவ்வாறு உள்ளது.?
பதில்: இந்த நிலைமை தொடர்பில் பிரதமர் அதிருப்தி வெளியிட்டார். நாங்களும் அதிருப்தி வெளியிட்டோம். பில்லியன் கணக்கில் திருட்டுகளும் மோசடிகளும் கடந்த ஆட்சியில் இடம்பெற்றுள்ளன. அவை தொடர்பில் எந்த முன்னேற்றமும் இல்லை. அனைவரும் அதிருப்திவெளியிட்டனர்.
கேள்வி: ஊழல் எதிர்ப்பு செயலகத்தை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. அப்படியாயின் இதுவரை காலம் செலவிட்ட நிதிக்கு யார் பொறுப்பு கூறுவது?
பதில்: அரசாங்கம் இன்னும் அதனை மூடுவதற்கு தீர்மானிக்கவில்லை.
கேள்வி: இந்த ஊழல் மோடி விசாரணைத் திணைக்களங்களை மூன்று மாதங்களுக்கு தனக்கு தந்தால் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கூறினாரா?
பதில்: ஆம். ஜனாதிபதி அவ்வாறு கூறினார். ஜனாதிபதியிடம் இதனைக் கொடுத்தால் தற்போது அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் எல்லாம் முடிவுக்கு வரும். கடந்த அரசாங்கத்தில் மோசடி செய்த கும்பலே இந்த எதிர்ப்பு போராட்டங்களின் பின்னால் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.
கேள்வி: அப்படியாயின் உங்கள் அரசிலேயே யாராவது இவ்வாறு ஊழல் விசாரணையை தடுக்கின்றார்களா?
பதில்: அதுதான் நன்றாகத் தெரிகின்றதே
கேள்வி: அவர்கள் யார்?
பதில்: அதை எனது வாயால் கூறவேண்டியதில்லை. சில விடயங்களை உணர்ந்து கொள்வதற்காகத்தான் வாய்க்கு மேல் மூளை இருக்கிறது.
கேள்வி: பாரிய ஊழல்கள் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழு அதிகமான சம்பவங்களை முடித்துவிட்டதே?
பதில்: அது தொடர்பான அறிக்கைகள் நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அதாவது இங்கு ஒரு விடயத்தை கூறவேண்டும். இந்த ஆணைக்குழுவின் விசாரணை நடைபெறும் அலுவலகத்தில் இரண்டு ஊடகவியலாளர்கள் மட்டுமே இருப்பார்களாம். ஆனால் சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துவிட்டு வெளியே வரும் போது 22 ஊடகவியலாளர்கள் காத்திருந்து அவரின் கருத்தை பெறுவார்களாம்.
அதுமட்டுமின்றி பத்திரிகைகளும் மத்திய வங்கி ஊழல் மோசடி குறித்து மட்டுமே பக்கம் பக்கமாக எழுதுகின்றன. மாறாக கடந்த ஆட்சியில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் திருடர்கள் தொடர்பில் எதுவும் எழுதுவதில்லை. இதன்மூலம் யார் யாரைக் காப்பாற்ற முயற்சிக்கின்றனர் என்று தெரிகின்றது.
கேள்வி: காமினி செனரத் தொடர்பாக அமைச்சரவையில் பேசப்பட்டதா?
பதில்: அவர் தொடர்பில் பேசப்பட்டது. அவர் காசு எடுத்து சென்று வங்கியில் வைப்பிலிட்டது எல்லாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
கேள்வி: மீண்டும் மஹிந்த ஆட்சிக்குவந் தால் மைத்திரிபால சிறிசேனவிற்கு அச்சுறுத் தல் ஏற்படும் என நேற்று அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டதா?
பதில்: அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவ்வாறு அச்சுறுத்தல் ஏற்படும். கடந்த முறை பாதயாத்திரை சென்றபோது இனி ஆட்சியைப் பிடித்தால் 20 வருடங் களுக்கு இழக்கமாட்டோம் என கூறிக் கொண்டார்களாம். அதுமட்டுமின்றி கடந்த முறை வெற்றிபெற்றிருந்தால் அடுத்த 20 வருடங்களுக்கு அவர்களின் ஆட்சி தொடர்ந்திருக்கும். மகன் மகனின் மகன் என அனைவரும் ஆட்சி புரிந்திருப்பார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM