நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவையென 64 இலட்சம் மக்கள் எமது அரசாங்கத்திற்கு ஆணையை வழங்கியுள்ளனர் என்று இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
அந்த ஆணைக்கு ஏற்பவே பாராளுமன்றம் புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.
எனவே மக்கள் வழங்கியுள்ள ஆணையின்படி அரசாங்கம் அரசியலமைப்பை கொண்டுவரும். அதில் எந்த மாற்றமும் இல்லை.
அரசியலைப்பை தயாரித்து அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவோம். தொடர்ந்து உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கினால் சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்வோம்.
அதில் மக்கள் தமது முடிவை அறிவிப்பார்கள். அதுமட்டுமன்றி இந்த விடயத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மிகவும் நேர்மையான முறையில் செயற்பட்டு வருகின்றார் எனவும் ராஜித சேனாரட்ன சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் சரமாரியாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM