இஸ்லாமிய தீவிரவாத அமைப்பாக செயற்படுகின்ற ஐ.எஸ். அமைப்பினர் உருவாக்கியுள்ள இஸ்லாமிய இராஜ்ஜியத்தின் வரைபடத்தில் இலங்கையும் இணைக்கப்பட்டுள் ளதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்தது.
தற்காலத்தில் 30 க்கும் மேற்பட்ட இலங்கை இஸ்லாமியர்கள் குறித்த அமைப்புடன் தொடர்புகளை பேணி வருகின்றன . எனவே இது குறித்து சங்க சபைகள் இணைந்து விசேட அறிக்கையொன்றை விரைவில் வெளியிடும் என அவ்வமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்தார்.
பொதுபலசேனா அமைப்பின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்காலத்தில் பொதுபல சேனாவானது ஐ.எஸ் அமைப்பு போன்ற ஒரு இயக்கம் என கூறப்படுவதை அவதானித்தோம். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான பிரதான பத்திரிகை ஒன்றில் ஐ. எஸ் அமைப்பு அமெரிக்க தூதரகத்திற்கு தாக்குதல் நடத்தவிருப்பதாக கூறப்பட்டிருந்தது.
எமது அமைப்பு இந்த விடயத்தினை 2013 ஆம் ஆண்டிலேயே கூறியிருந்தது. இருப்பினும் பாதுகாப்பு தரப்புக்கள் அதனை கருத்திற்கொள்வில்லை. 2012 ஆம் ஆண்டில் நாம் பொதுபல சேனா அமைப்பை ஆரம்பிக்கும்போது இந்த பிரச்சினை பூதாகரமாக காணப்பட்டது.
அதோபோல் மத்திய கிழக்கிற்கு சென்றுள்ள சிலர் எமது அமைப்பினை தொடர்பு கொண்டு இங்கிருந்து செல்லும் இஸ்லாமியர்கள் மூளைச்சலவை செய்து தீவிரவாத அமைப்புக்களுடன் இணைவதற்கான தயார்படுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் எமது நாட்டிலுள்ள சகல முஸ்லிம்களையும் தீவிரவாதிகள் என்று நாங்கள் சுட்டிக்காட்டவில்லை. சில முஸ்லிம் குடும்பஸ்தர்கள் தமது பிள்ளைகளை சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பிய பின்னர் அவர்கள் எமது அலுவலகத்திற்கு வந்து தமது பிரச்சினைகளை கூறுகின்றார்கள்.
அதன் பின்னர் தான் நாம் இதுகுறித்து அவதானம் செலுத்தினோம். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இது குறித்து பெரிதும் அவதானம் செலுத்தப்படவில்லை. காரணம் ஐ.நா. விவகாரத்தின் போது இலங்கைக்கு அரேபிய நாடுகள் பெரிதும் உதவியதால் கடந்த அரசாங்கம் அவர்களுடன் நட்புறவை பேணியது.
யுத்தத்தினை முடித்த பின்னர் எந்த தீவிரவாத அமைப்பு எம்மை எதிர்த்தாலும் அவர்களுடன் போராடுவோம் என்ற மனநிலையில் பாதுகாப்பு தரப்புக்களும் இருந்தன .
அதனால் கடந்த அரசாங்கத்தினால் இஸ்லாமிய இனவாதிகள் பற்றி தேடவில்லை என்று கூற முடியாது. காரணம் அந்த நாட்களில் இஸ்லாமிய இனவாதம் பற்றி தேடுவதற்கு தனியான ஒரு அமைப்பு இராணுவத்தினுல் இருந்தது.
அளுத்கமை சம்பவத்தின் பின்னால் ஐ. எஸ் அமைப்பு
அதேபோல் அளுத்தகமை சம்பவத்தின் போது பொதுபல சேனா அமைப்பு கலவரம் செய்தாக கூறப்படுகின்றது. ஆனால் எமது அமைப்பு அங்கு செல்லும் முன்பே காத்தான்குடியிலுள்ள ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவானர்கள் அங்கு பஸ்களில் கொண்டு வந்து இறக்கப்பட்டிருந்தனர். அதன் பின்னர் பொதுபல சேனா அமைப்பின் கலவரம் என இந்த விடயம் உலக நாடுகளுக்கு பரப்பப்பட்டது.
ஐ.எஸ் அமைப்பின் வரைபடத்தில் இலங்கை
எவ்வாறாயினும் ஐ.எஸ் அமைப்பினர் உருவாக்கவுள்ள இஸ்லாமிய இராஜ்ஜிய வரைபடத்தின் ஒரு மூலையில் இலங்கையும் உள்ளது. மேலும் இலங்கையில் 30 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஐ.எஸ்.ஐ. எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக பிரதரரும் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்சவும் பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்கள். இருப்பினும் 30 க்கும் மேலானவர்கள் அவ்வமைப்புடன் தொடர்பை பேணிவருகின்றனர் என்பதே நிதர்ஷனமாகும்.
சங்க சபையினர் விசேட கூட்டறிக்கை விடுவர்
அதனால் பிரிந்திருந்த பிரதான மகா சங்கத்தினரும் கூட ஒன்றிணைந்து எமக்கான முக்கியமான அறிக்கையொன்றை மேற்படி விடயங்கள் தொடர்பில் வெளியிடவுள்ளனர். மல்வத்து பீடமும் இணைந்து முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிடும் .
அதேநேரம் கிழக்கு மா காணத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற இஸ்லாமிய பல்கலைக்கழகமும் எதிர்வரும் நாட்களில் ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பின் ஆக்கிரமிப்புக்கு இலக்காகும் சாத்தியங்கள் உள்ளன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM