வித்தியா பாலியல் வல்லுறவு கொலை வழக்கு : சிரேஷ்ட சட்ட விரிவுரையாளர் தமிழ்மாறன் இன்று சாட்சியம்

Published By: Robert

04 Jul, 2017 | 09:53 AM
image

புங்­கு­டு­தீவு பாட­சாலை மாணவி சிவ­லோகநாதன் வித்­தி­யாவின் கூட்­டுப்­பா­லியல் வல்­லு­றவு படு­கொலை வழக்கின் முக்­கிய சாட்சிப் பதி­வொன்று இன்­றைய தினம் யாழ்ப்­பாணம் மேல்­நீ­தி­மன்றில் அமைக்­கப்­பட்­டுள்ள ரயல்அட்பார் நீதி­மன்றில் இடம்­பெ­ற­வுள்­ளது. 

குறித்த மாண­வியின் கூட்டு பாலியல் வல்­லு­றவு படு­கொலை வழக்­கா­னது யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்றில் அமைக்­கப்­பட்­டுள்ள மூன்று தமிழ் மொழி பேசும் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளான பாலேந்­திரன் சசி­ம­கேந்­திரன் தலை­மையில் அன்­ன­லிங்கம் பிரே­ம்­சங்கர், மாணிக்­க­வா­சகர் இளஞ்­செ­ழியன் ஆகியோர் அடங்­கிய ரயல்அட்பார் நீதாய விளக்க நீதி­மன்றில் தொடர் விசா­ர­ணை­யாக இடம்­பெற்று வரு­கின்­றது.

இத் தொடர் வழக்கு விசா­ர­ணையில் ஐந்­தா­வது நாளான இன்று கொழும்பு சட்ட பீடத்தின் சிரேஷ்ட சட்ட விரிவுரையாளர் வி.ரி. தமிழ்மாறன் சாட்சியமளிக்கவுள்ளார். குறித்த மாணவியின் கொலைச் சம்பவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து பொது மக்களால் இவ்வழக்கின் 9 ஆவது சந்தேக நபரான சுவிஸ்குமார் சுற்றிவளைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். 

பின்னர் இவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அங்கிருந்து தப்பித்து கொழும்பு சென்றிருந்தார். 

இச் சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் சாட்சியமளிக்கவுள்ள வி.ரி.தமிழ் மாறனுக்கும் தொடர்புகள் இருப்பதாக அன்றைய காலப்பகுதியில் பரவலாக கூறப்பட்டுவந்திருந்தமையும் இந்நிலையில் அவர் வழக்குத் தொடுனர் தரப்பு சாட்சியாக இன்று சாட்சியமளிக்கவுள்ள மையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:20:41
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 11:22:06
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47