புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கூட்டுப்பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கின் முக்கிய சாட்சிப் பதிவொன்று இன்றைய தினம் யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் அமைக்கப்பட்டுள்ள ரயல்அட்பார் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.
குறித்த மாணவியின் கூட்டு பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கானது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் அமைக்கப்பட்டுள்ள மூன்று தமிழ் மொழி பேசும் மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் அன்னலிங்கம் பிரேம்சங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய ரயல்அட்பார் நீதாய விளக்க நீதிமன்றில் தொடர் விசாரணையாக இடம்பெற்று வருகின்றது.
இத் தொடர் வழக்கு விசாரணையில் ஐந்தாவது நாளான இன்று கொழும்பு சட்ட பீடத்தின் சிரேஷ்ட சட்ட விரிவுரையாளர் வி.ரி. தமிழ்மாறன் சாட்சியமளிக்கவுள்ளார். குறித்த மாணவியின் கொலைச் சம்பவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து பொது மக்களால் இவ்வழக்கின் 9 ஆவது சந்தேக நபரான சுவிஸ்குமார் சுற்றிவளைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் இவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அங்கிருந்து தப்பித்து கொழும்பு சென்றிருந்தார்.
இச் சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் சாட்சியமளிக்கவுள்ள வி.ரி.தமிழ் மாறனுக்கும் தொடர்புகள் இருப்பதாக அன்றைய காலப்பகுதியில் பரவலாக கூறப்பட்டுவந்திருந்தமையும் இந்நிலையில் அவர் வழக்குத் தொடுனர் தரப்பு சாட்சியாக இன்று சாட்சியமளிக்கவுள்ள மையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM