சைட்டம் பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு காணாவிட்டால் எதிர்காலத்தில் நாட்டில் வைத்தியர்களின் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருக்கின்றது என சோஷலிச மக்கள் முன்னணியின் செயலாளர் ராஜா கொல்லுரே தெரிவித்தார்.
சோஷலிச மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,
மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் கள் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். வைத்தியர்களின் பணி பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்களே பாதிக்கப்படுகின்றனர்.
அத்துடன் சைட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜனவரி மாதம் முதல் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவர்களின் இறுதியாண்டு பரீட்சைகள் பாதிக்கப்படப்போகின்றன. அத்துடன் மாணவர்களின் பரீட்சை பிற்படும்போது வருடாந்தம் மருத்துவபீடத்தில் இருந்து வெளியாகும் வைத்தியர்களின் வீதம் குறைவடையும். இதனால் எதிர்காலத்தில் நாட்டில் வைத்தியர்களுக்கான பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வைத்திய கல்லூரிகளின் தரம் குறித்து தீர்மானம் எடுக்கவேண்டியது இலங்கை வைத்திய சபையாகும். தரம் குறைந்த வைத்திய கல்லூரிகளுக்கு யாரும் அங்கீகாரம் வழங்கமாட்டார்கள். அரசாங்கமும் அதனை ஏற்கின்றது. அத்துடன் தனியார் வைத்திய கல்லூரிக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள். ஆனால் அந்த வைத்திய கல்லூரிகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு சிகிச்சை பயிற்சி அளிக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
வைத்திய பீடங்களில் இருந்து நாட்டுக்கு வருடாந்தம் வெளியேற்றப்படவேண்டிய வைத்தியர்களுக்கான வீதம் ஒன்று இருந்து வருகின்றது. அப்போதுதான் ஆரோக்கியமான வைத்திய சேவையை மேற்கொண்டுசெல்லாம். அத்துடன் நாட்டில் தனியார் வைத்திய கல்லூரிகளை ஏற்படுத்துவதன் மூலம் எமது நாட்டின் அந்நிய செலாவணி வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளலாம். எமது நாட்டு மாணவர்கள் வெளிநாடுகளில் பயில்வதால் வருடாந்தம் பில்லியன் ரூபா கணக்கில் எமது செலாவணி வெளியில் செல்கின்றது.
எனவே சைட்டம் தொடர்பாக எழுந்தி ருக்கும் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் நாட்டில் பாரியளவில் வைத்தியர்களுக்கான பற்றாக் குறை ஏற்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM