வவுனியாவில் வயோதிபரின் சடலம் மீட்பு : கொலையா ? மரணமா? விசாரணை ஆரம்பம்

Published By: Priyatharshan

03 Jul, 2017 | 04:23 PM
image

வவுனியா திருநாவற்குளம் பார ஊர்தி தரிப்பிடத்திலுள்ள நீர் தொட்டியொன்றுக்குள் இருந்து  இன்று மதியம் வயோதிபர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா திருநாவற்குளம் பார ஊர்தி தரிப்பிடத்தில் கடந்த சில காலமாக தங்கியிருந்த 53 வயதுடைய இராசரட்ணம் அரியரட்ணம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையென்றும்  இன்று மதியம் குளிப்பதற்கு தண்ணீர் தொட்டிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையிலேயே குறித்த நபர் தண்ணீர் தொட்டியினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வவுனியா பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி தலைமையிலான குழுவினர் சடலத்தை மீட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, குறித்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இறப்பிற்கான காரணம் என்ன என்ற கோணத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17