வவுனியா திருநாவற்குளம் பார ஊர்தி தரிப்பிடத்திலுள்ள நீர் தொட்டியொன்றுக்குள் இருந்து இன்று மதியம் வயோதிபர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா திருநாவற்குளம் பார ஊர்தி தரிப்பிடத்தில் கடந்த சில காலமாக தங்கியிருந்த 53 வயதுடைய இராசரட்ணம் அரியரட்ணம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையென்றும் இன்று மதியம் குளிப்பதற்கு தண்ணீர் தொட்டிக்கு சென்றுள்ளார்.
இந்நிலையிலேயே குறித்த நபர் தண்ணீர் தொட்டியினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வவுனியா பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி தலைமையிலான குழுவினர் சடலத்தை மீட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, குறித்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இறப்பிற்கான காரணம் என்ன என்ற கோணத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM