இரத்­ம­லா­னையில் விமா­னத்தை கடத்தி அமெ­ரிக்க தூத­ர­கத்தை தாக்க ஐ.எஸ். திட்­டமா? விசேட எச்­ச­ரிக்கை வர­வில்லை; பாது­காப்பு பலம் என்­கி­றது விமா­னப்­படை  

Published By: Priyatharshan

03 Jul, 2017 | 09:56 AM
image

இரத்­ம­லா­னை விமான நிலை­யத்தில் இருந்து விமா­னப் ­ப­டை­யி­னரின் ஹெலிகள்,  விமா­னங்­களை பயன்­ப­டுத்­தியோ அல்­லது சிவில் விமா­னங்­களைப் பயன்­ப­டுத்­தியோ  சர்­வ­தேச பயங்­க­ர­வாத அமைப்­பான ஐ.எஸ்.அமைப்பு தாக்­குதல் நடத்­த­வுள்­ள­தாக எந்த சிறப்பு எச்­ச­ரிக்­கை­களும் எமக்கு கிடைக்­க­வில்லை.

எனினும் ஐ.எஸ். உள்­ளிட்ட எந்த அமைப்பின் சதி­க­ளையும் உடைத்­தெறியும் வித­மாக இரத்­ம­லானை விமான நிலை­யத்தின் பாது­காப்­பா­னது பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே உள்­ள­தாக விமா­னப்­படை ஊடகப் பேச்­சாளர் குறூப் கெப்டன் கிஹான் சென­வி­ரத்ன கேச­ரிக்கு தெரி­வித்தார்.

இரத்­ம­லா­னையில் விமா­னப்­ப­டை­யி­னரின் பூரண பாது­கா­பபு கட்­டுப்­பாட்டின் கீழ் உள்ள விமான நிலை­யத்தில் இருந்து விமானம் ஒன்­றினை கடத்தி அமெ­ரிக்க தூத­ர­கத்தை தகர்க்க ஐ.எஸ்.சர்­வ­தேச பயங்­க­ர­வாத அமைப்பு திட்­ட­மிட்­டுள்­ள­தாக அமெ­ரிக்க உளவுத் துறை கொழும்பில் உள்ள அமெ­ரிக்க தூத­ர­கத்தை அறி­வு­றுத்­தி­யுள்­ள­தாக வெளி­யா­கி­யுள்ள தக­வல்கள் தொடர்பில் விமா­னப்­படை பேச்­சா­ளரை தொடர்­பு­கொண்டு கேட்ட போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

இரத்­ம­லானை விமான நிலை­யத்தில் விமானம் ஒன்றை கடத்திச் சென்று கொழும்பில் உள்ள அமெ­ரிக்க தூத­ர­கத்தை தாக்க ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­திகள் திட்­ட­மிட்­டுள்­ள­தாக தகவல் கிடைத்­துள்­ளது என அமெ­ரிக்க புல­னாய்வு பிரிவு அறி­வித்­துள்­ள­தாக ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டன.

இவ்­வா­றான நிலை­மைக்கு இட­ம­ளிக்­காது உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அமெ­ரிக்க பாது­காப்பு தரப்பு இலங்கை அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வித்­துள்­ள­தாக அந்த செய்­தி­களில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தன.

இந்த நிலைமை கார­ண­மாக அமெ­ரிக்க புல­னாய்வுப் பிரிவு மற்றும் சிவில் அதி­கா­ரிகள் இலங்கை வந்­துள்­ள­தாக அந்த செய்­திகள் தெரி­வித்­தன.

 இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குன­சே­க­ரவை தொடர்­பு­கொண்டு கெட்ட போது, அவ்­வா­றான எந்த தக­வலும் தனக்கு இது­வரைக் கிடைக்­க­வில்லை எனவும் தேசிய பாது­க­பபு விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­பட்ட விட­யங்கள் குறித்து உடன் கருத்து தெரி­விக்க முடி­யாது எனவும் தெரி­வித்தார்.

 அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

' இந்த தக­வல்­களை நானும் ஊட­கங்கள் ஊடாக அறிந்தேன். எனினும் அது தொடர்பில் என்னால் கருத்­து­ரைக்க முடி­யாது.

  இது வரை எமக்கு எந்­த­வொரு விஷேட தாக்­குதல் திட்டம் குறித்தும்   எச்­ச­ரிக்­கைகள் கிடைக்கப் பெற­வில்லை. சாத­ர­ண­மாக விமான நிலை­யத்­துக்கு, ஐ.எஸ். என்­றில்­லாது எந்­த­வொரு சதி­யையும் முறி­ய­டிக்கும் வித­மான 24 மணி நேர சிறப்பு பாது­காப்பே வழங்கப்பட்டுள்ளது. இது எந்தவொரு தாக்குதலையும் முறியடிக்கும் விதமாகவே வழங்கப்பட்டுள்ளது.

எனவே தனியான ஒரு குழுவையோ பிரிவையோ இலக்கு வைத்து பாதுகாபபு நடவடிக்கை இல்லை. அனைத்து சதிகார நடவடிக்கைகளையும் முரியடிக்கும் விதமாக பாதுகபபு ஸ்திரமாக உள்ளது என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36