அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்துள்ள பேரணியும் பொதுக் கூட்டமும் இன்று பி.ப.2.30 மணிக்கு திருகோணமலை நகரில் முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.
திருமலை துறைமுகம், எண்ணெய்க்குதம் உள்ளடங்கலாக தேசிய சொத்துகளை விற்பனை செய்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துகின்றமை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, ஊழல் மோசடி, பிரிவினைவாத அரசியலமைப்பு, டெங்கு நோயை கட்டுப்படுத்த முடியாமை உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டே அரசாங்கத்திற்கு எதிராக குறித்த பேரணியும் கூட்டமும் நடத்தப்படுகிறது.
இக்கூட்டத்தில் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம்வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர். திருமலை மாவட்டத்தில் கூட்டம் நடைபெறுகின்றபோதும் இக்கூட்டம் அம்மாவட்ட மக்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலிருந்தும் அதிகளவானோரை கலந்துகொள்ளச் செய்வதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
மேலும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு தென்னிலங்கையிலிருந்து வருகை தரும் பிரதானிகள் அநுராதபுரத்திலிருந்து வாகனப் பேரணியாகச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM