(க.கமலநாதன்)
கம்பஹா முதுராஜவெல பகுதியில் குப்பை கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் விடுத்த கடும் எதிர்ப்பின் மத்தியிலும் இன்று மூன்றாவது நாளாக அங்கு குப்பை கொட்டப்பட்டது.
இன்றைய தினம் முதுராஜவெல பகுதியில் குப்பை கொட்டுவது தொடர்பில் அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் உடனான சந்திப்பொன்று இடம்பெற்றதன் பின்னர் குப்பை கொட்டப்படும் இடத்தை பார்வையிட அப்பகுதி மக்கள் சென்றிருத்த போதே இவ்வாறு குழப்ப நிலைமை தோன்றியிருந்தது.
அப்பகுதி மக்கள் பிரதிநிதிகளுடன் சென்று பொது மக்கள் குப்பை கொட்டும் இடங்களை பார்வையிட்டு வெளியேறிச் செல்ல முற்பட்ட போது அவ்விடத்திற்கு குப்பைகளை ஏற்றிய லொறியொன்று வந்தது.
அதனை பார்த்த மக்கள் அவ்விடத்தில் குப்பை கொட்ட வேண்டாம் என்று லொறியை இடைமறித்தால் பெரும் குழப்பம் ஏற்பட்டு பிரதேசத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.
அவ்விடத்தில் முன்கூட்டியே பொலிஸ் விசேட அதிரடி படையின் உதவியுடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த காரணத்தினால் மூன்றாவது நாளாக இன்றும் குப்பை கொட்டப்பட்டது.
அதேபோல் இப்பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு பேராயர் கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிக்கையொன்றின் வாயிலாக நேற்று தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM