பட அதிபர் மதனுக்கு சொந்தமான சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமலாக்கப்பிரிவினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் ‘சீட்’ வாங்கித் தருவதாக ரூ.91 கோடி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிசார் வழக்குப்பதிவு செய்து சினிமா பட அதிபர் மதனை கைது செய்தனர்.
பணத்தை பறிகொடுத்த 133 மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கொடுத்த புகார் அடிப்படையில் பட அதிபர் மதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. முறைகேடான பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக மத்திய அரசின் அமலாக்கப்பிரிவும் பட அதிபர் மதன் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டது.
அமலாக்கப்பிரிவு தற்போது பட அதிபர் மதனுக்கு சொந்தமான ரூ.6.35 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை வடபழனி மற்றும் சாலிகிராமத்தில் உள்ள சொத்துகள், கேரளா மாநிலம் கொல்லத்தில் உள்ள சுமார் 6 ஏக்கர் நிலம் மற்றும் 2 வீடுகள் முடக்கப்பட்ட சொத்துகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
அமலாக்கப்பிரிவினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேற்கண்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM