மதனின் சொத்துகளை முடக்கும் அமலாக்கத்துறை

01 Jul, 2017 | 11:52 AM
image

பட அதிபர் மதனுக்கு சொந்தமான சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமலாக்கப்பிரிவினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் ‘சீட்’ வாங்கித் தருவதாக ரூ.91 கோடி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிசார் வழக்குப்பதிவு செய்து சினிமா பட அதிபர் மதனை கைது செய்தனர்.

பணத்தை பறிகொடுத்த 133 மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கொடுத்த புகார் அடிப்படையில் பட அதிபர் மதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. முறைகேடான பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக மத்திய அரசின் அமலாக்கப்பிரிவும் பட அதிபர் மதன் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டது.

அமலாக்கப்பிரிவு தற்போது பட அதிபர் மதனுக்கு சொந்தமான ரூ.6.35 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை வடபழனி மற்றும் சாலிகிராமத்தில் உள்ள சொத்துகள், கேரளா மாநிலம் கொல்லத்தில் உள்ள சுமார் 6 ஏக்கர் நிலம் மற்றும் 2 வீடுகள் முடக்கப்பட்ட சொத்துகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அமலாக்கப்பிரிவினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேற்கண்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35