காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என கண்­ட­றிந்து  கூற­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் பொறுப்­பு

Published By: Priyatharshan

01 Jul, 2017 | 10:00 AM
image

காணா­மல்­போ­னோ­ருக்கு என்ன நடந்­தது என்ற  உண்­மையை கண்­ட­றிந்து  கூற­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மையும் பொறுப்­பு­மாகும்  அதி­லி­ருந்து விலகிச்செல்ல முடி­யாது  என  காணாமல் போனோர் தொடர்­பாக விசா­ரணை நடத்­திய முன்னாள் ஜனா­தி­பதி  ஆணைக்­கு­ழுவின் தலைவர்  ஓய்வு பெற்ற நீதி­பதி மெக்ஸ்வல் பர­ண­கம தெரி­வித்தார். 

காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் தொடர்ந்து  போராட்­டங்­களை  முன்­னெ­டுத்து வரு­கின்ற  நிலை­மையில்  அது­தொ­டர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

காணாமல்போனோரின் உற­வி­னர்­களைப் பொறுத்­த­வ­ரையில் தமது அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை தெரிந்து கொள்ளும் உரிமை உள்­ளது. அந்த  உரி­மையை யாரும் மறுக்க முடி­யாது. எனவே காணா­மல்­போ­னோ­ருக்கு என்ன நடந்­தது என்ற  உண்­மையை கண்­ட­றிந்து  கூற­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மையும் பொறுப்­பு­மாகும்  அதி­லி­ருந்து விலகிச்செல்ல முடி­யாது.

காணா­மல்­போனோர் தொடர்­பாக கண்­ட­றி­வ­தற்­காக ஒரு பொறி­மு­றையை உரு­வாக்கி அத­னூ­டாக உண்­மையைக் கண்­ட­றி­ய­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கடமை.  அதனை  தட்­டிக்­க­ழிக்க முடி­யாது.  உண்­மையை கண்­ட­றிய முடி­யுமா, முடியா என்­பது வேறு­கதை ஆனால் அதற்­கான முயற்­சியை எடுக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

மேலும் காணாமல் போனோரின் உற­வி­னர்­க­ளுக்கு தமது வாழ்க்­கையை கொண்­டு­செல்­வ­தற்­காக ஐந்து இலட்சம் ரூபா கொடுப்­ப­னவை வழங்­க­வேண்டும் என்­ப­துடன் அவர்­க­ளுக்கு வீடு­க­ளையும் பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்­டி­யது அத்­தி­யா­வ­சி­ய­மான  விட­ய­மாகும்.

காணா­மல்­போனோர் தொடர்­பாக  ஆராயும்   அலு­வ­லகம் தொடர்­பான சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.  அந்த சட்­டத்­தி­லுள்ள ஏற்­பா­டு­களை  நான் இது­வரை முழு­மை­யாக ஆரா­ய­வில்லை.   எவ்­வா­றி­ருப்­பினும் காணா­மல்­போனோர் விவ­கா­ரத்தில் அர­சாங்கம்   விரை­வாக  செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.   இந்த விவ­கா­ரத்தில்   வெளி­நாட்டு நிபு­ணர்­களின்  தொழிற்­நுட்ப உத­வி­களைப் பெற்­றுக்­கொள்ள முடியும். 

அத்­துடன் கண்­கா­ணிப்­பா­ளர்­களும் இருக்­கலாம்.  எமது ஆணைக்­குழு   ஆயி­ரக்­க­ணக்­கான எழுத்­து­மூல முறைப்­பா­டு­களை  காண­மல்­போனோர் தொடர்பில் பெற்­றுக்­கொண்­டது.   அத்­துடன் சுமார்  6000 பாதிக்­கப்­பட்ட மக்­களை நாங்கள் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினோம். அதன்­பின்னர் அந்த ஆணைக்­கு­ழு­வா­னது ஒரு விசா­ர­ணைக்­கு­ழுவை நிய­மித்­தது. 

அந்த விசா­ர­ணைக்­குழு பாதிக்­கப்­பட்­டோரை சந்­தித்து  தக­வல்­களைப் பெற்­றுக்­கொண்­டது. இந்த செயற்­பாடு ஒரு தொடர் நட­வ­டிக்­கை­யாக அமைந்­தது.  இவ்­வா­றான நிலையில் எமது  காணா­மல்­போனோர் குறித்து விசா­ரிக்கும்  ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் கால எல்லை முடி­வுக்கு வந்­தது. அதனால்  எமது செயற்­பா­டு­களை தொட­ர­மு­டி­யாது போனது.  

எனினும் ஒரு­சில விட­யங்­களை இங்கு குறிப்­பிட்டே ஆக­வேண்டும். அதா­வது தமது அன்­புக்­கு­ரி­ய­வர்கள் காணாமல் போன நிலையில் கஷ்­டப்­பட்­டுக்­கொண்­டி­ருக்கும் குடும்­பங்­க­ளுக்கு  முதலில் தமது வாழ்­வா­தார செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக  ஐந்து இலட்சம் ரூபா பணத்தை வழங்­க­வேண்டும். இந்த விட­யத்தில் தாமதம் இருக்­கக்­கூ­டாது.  

அத­னூ­டாக  பாதிக்­கப்­பட்ட மக்கள்  தமது பொரு­ளா­தா­ரத்தை வலுப்­ப­டுத்த  நட­வ­டிக்கை எடுக்க முடியும்.  அதே­போன்று வீடுகள் இல்­லாமல் இருக்­கின்ற  பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு வீடு­களைப் பெற்­றுக்­கொ­டுக்­கவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும். 

காணா­மல்­போ­ன­வர்­களின்  உற­வி­னர்­களின் காணிகள் அப­க­ரிக்­கப்­பட்­டி­ருப்பின் அவை  விரை­வாக மீள­ளிக்­கப்­ப­ட­வேண்டும்.   இது தொடர்பில் அர­சாங்கம் கவனம் செலுத்­த­வேண்டும். காணா­மல்­போன தமது  அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை  அறிந்து கொள்­வ­தற்­கான உரிமை பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கே இருக்­கி­றது. 

அந்தப் பொறுப்பை யாரும்  தட்­டிக்­க­ழிக்க முடி­யாது. குறிப்­பாக  இது தொடர்­பான கட­மையை அர­சாங்கம் தட்­டிக்­க­ழிக்க முடி­யாது. இது தொடர்பில் அர­சாங்­கத்­திற்கு  பாரி­ய­தொரு பொறுப்பு காணப்படுகின்றது. அதாவது  காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க   அரசாங்கம் ஒரு பொறிமுறையை  தயாரித்து அதனூடாக உண்மையை கண்டறியவேண்டும்.  

இந்தப் பொறிமுறையில்  காணாமல்போனோர்  தொடர்பில் கண்டுபிடிக்க முடியுமா முடியாதா என்பதை உறுதியாக கூற முடியாது. ஆனால் அதற்கான முயற்சியை  எடுக்கவேண்டியது அரசாங்கத்தின் பாரிய கடமையாகும்.  அந்த கடமையிலிருந்து அரசாங்கம்   விலகி செல்ல முடியாது என்றார். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59