இரத்தினபுரி மாவட்டம் தற்போது காணப்படும் நிலையை மேலும் 25 வருடங்களுக்கு அப்பாலும் பேண வேண்டுமாயின் அங்கு நடைபெறும் சுற்றாடல் பாதிப்புக்களை உடனடியாக தடுக்கவேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
இரத்தினக்கல் கைத்தொழிலை மேம்படுத்தல் அவசியமானது என்றபோதிலும், தமது எதிர்கால சந்ததிகளும் இப்பிரதேசத்தில் வாழும் உரிமையை உறுதிசெய்து அங்கு நடைபெறும் சுற்றாடல் பாதிப்புக்களை தடுப்பதற்கான தமது பொறுப்புக்களை வர்த்தக சமூகத்தினரைப் போன்றே ஏனையோரும் நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
இரத்தினபுரி மாகாணத்தின் பொது மருத்துவமனையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள் பலவற்றையும் திறந்துவைக்கும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்ற மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு நிலைமைகள் தொடர்பாக தேசிய கட்டிடங்கள் ஆய்வு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களுள் அனுமதியற்ற முறையில் மேற்கொள்ளப்படும் இரத்தினக்கல் அகழ்வு காரணமாக ஏற்பட்டுள்ள சுற்றாடல் பாதிப்புக்களே முதன்மையான காரணமாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தற்போது நாட்டில் ஏற்படும் சில நிகழ்வுகள் தற்போது ஆட்சிபுரிபவர்களின் கிரக பலன்கள் காரணமாகவே ஏற்படுகின்றதென ஒரு சிலர் தெரிவிப்பதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, காலநிலை மற்றும் வானிலை மாற்றங்களினால் பூகோள வெப்பமடைதல் காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றங்களை இன்று உலக நாடுகள் அனைத்துமே எதிர்நோக்க நேர்ந்துள்ளதுடன், சுற்றாடல் சவால்களை எம்மால் தடுக்க முடியாது என்பதுடன் இயற்கையின் மாற்றங்களுக்கு ஏற்ப நாமும் செயற்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.
இரத்தினபுரி மாகாணத்தின் பொது மருத்துவமனையில் 100 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய சிறுவர் வாட்டுத் தொகுதி, இரத்த வங்கி, குருதி சுத்திகரிப்புப் பிரிவு, மற்றும் ஓ கதிர் பிரிவு என்பன ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டன.
பிரதேச நன்கொடையாளர்கள் மற்றும் அமெரிக்க பிரஜையான லுவிஸ் எலனின் தனிப்பட்ட அன்பளிப்பில் இந்த புதிய கட்டிடத்தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்க பிரஜையான லுவிஸ் எலனுக்கு நினைவுப்பரிசொன்றும் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.
நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து சிறுவர் வாட்டுத்தொகுதி மற்றும் இரத்த வங்கி என்பவற்றைத் திறந்துவைத்த ஜனாதிபதி, புதிய சிறுவர் வாட்டுத்தொகுதியின் முதலாவது நோயாளியையும் பதிவுசெய்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM