இந்த வருடத்தில் கடந்த 5 மாதங்களில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது சுமார் 38 இலட்சம் ரூபா போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜனவரி மாதம் தொடக்கம் மே மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது 38 இலட்சத்தி 94 ஆயிரத்து 600 ரூபா போலி நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போலி நாணயத்தாள்களில் ஆயிரம் ரூபா தாள்களே அதிகம் கிடைக்கப்பெற்றுள்ளன. அதனடிப்படையில் 174 – 5 ஆயிரம் ரூபா நாணயத்தாள்களும், 2000 ரூபா நாணயத்தாள்கள் 46, 1000 ரூபா நாணயத்தாள்கள் 2272 கைப்பற்றப்பட்டுள்ளன. அதேபோன்று 500 ரூபா நாணயத்தாள்கள் 1320 மற்றும் 100 ரூபா நாணயத்தாள்கள் 6 குறித்த சுற்றிவளைப்பின்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் இவ்வாறான போலி நாணயத்தாள்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில், பொலிஸ் திணைக்களத்தின் போலி நாணயத்தாள் பிரிவின் 0112326670 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும்
இதேவேளை, கடந்த புதன்கிழமை 6 இலட்சம் ரூபா பெறுமதியான போலி 5 ஆயிரம் ரூபா தாள்கள் ஒருதொகையுடன் 5 சந்தேக நபர்கள் மத்துகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM