போலி நாணயத் தாள்களுடன் ஐவரை மதுகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, ஐந்தாயிரம் ரூபா போலி நாணயத்தாளைப் பயன்படுத்தி மதுபானத்தை கொள்வனவு செய்ய முற்பட்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் 12 கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, மேற்கொள்ளபட்ட விசாரணைகளில் அவருக்கு அந்த நாணயத்தை வழங்கிய நால்வர் குறித்த தகவல் தெரியவந்தது.
இதற்கமைய, 127 போலி 5 ஆயிரம் ரூபாய் நாணயத் தாள்களுடன் மதுகம, குப்புக்கெடே மற்றும் வெரலபனாதர ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இன்று மதுகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM