வித்தியா மீதான பாலியல் வல்லுறவு படுகொலைக்கு காரணம் என்ன? ட்ரயல் அட்பார் நீதிமன்றில் பதில் சட்டமா அதிபர் எடுத்துரைப்பு

Published By: Priyatharshan

29 Jun, 2017 | 11:50 AM
image

வெளிநாட்டு ஒப்பந்தமொன்றின் அடிப்படையில் சர்வதேச சந்தையில் பாலியல் வல்லுறவு படுகொலையை ஒளிப்பதிவாக பதிவு செய்து விற்பனை செய்வதற்காகவே நன்கு திட்டமிட்ட வகையில்  வித்தியா மீதான கூட்டுப் பாலியல் வல்லுறவு படுகொலை இடம்பெற்றுள்ளது என்று பதில் சட்டமா அதிபர் டப்புள டி லிபேரா மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த குற்றச் செயலில் இருந்து தப்­பிப்­ப­தற்கு இவ் வழக்கின் ஒன்­ப­தா­வது சந்­தே­க­நபர் பொலிஸ் அதி­காரி ஒரு­வ­ருக்கு 20மில்­லியன் ரூபா இலஞ்சம் கொடுக்க முற்­பட்­ட­மையும் ஆதா­ரங்­க­ளு­டாக நிரூ­பிக்க முடியும் எனவும், இச் செய­லா­னது சர்­வ­தேச மயப்­ப­டுத்­தப்­பட்ட குற்றச் செயல் என்­ப­துடன் இது நாட்டின் கௌர­வத்­திற்கும் மரி­யா­தைக்கும் களங்கம் ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் மேற்­கொள்­ளப்­பட்ட ஒன்று எனவும் அவர்  சுட்டிக்காட்டினார்.

குறித்த மாண­வியின் கூட்டு பாலியல் வல்­லு­றவு படு­கொலை வழக்­கா­னது யாழ்ப்­பாண மேல் நீதி­மன்றில் தமிழ் மொழி பேசும் மூன்று மேல் நீதி­மன்ற நீதி­ப­திகள் அடங்­கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றின்முன் விசா­ரணை செய்­யப்­பட்டு வரு­கின்­றது. இவ் விசா­ர­ணையின் சாட்சிப் பதி­வுகள் நேற்­றைய தினம் ஆரம்­ப­மா­கிய போது பதில் சட்­டமா அதிபர் டப்­புள்ள டீ லிவேறா ட்ரயல் அட்பார் மன்றில் முன்­னி­லை­யாகி இவ் வழக்கின் ஆரம்ப உரையை நிகழ்த்­தி­யி­ருந்தார். இவ்­வாறு அவர் நிகழ்த்­திய ஆரம்ப உரை­யி­லேயே மேற்­கு­றிப்­பிட்­டி­ருந்த விட­யங்­களை தெரி­வித்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் அவர் தனது ஆரம்ப உரையில் இவ் வழக்கு தொடர்­பாக தெரி­வித்­தி­ருப்­ப­தா­த­வது,

இலங்கை சட்ட வர­லாற்றில் யாழ்ப்­பா­ணத்தில் ட்ரயல் அட்பார் நீதிமன்றில் விசா­ரணை இடம்­பெ­று­வது இதுவே முதல் முறை­யாகும். இவ் வழக்கில் எதி­ரி­க­ளுக்கு எதி­ராக சட்­டமா அதிபர் 41 குற்­றச்­சாட்­டுக்கள் அடங்­கிய குற்­றப்­ப­கிர்வு பத்­தி­ரத்தை தாக்கல் செய்­துள்ளார். அத்­துடன் இவ் வழக்கை விசா­ரனை செய்ய பிர­தம நீதி­ய­ரசர் மூன்று தமிழ் மொழி பேசும் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளையும் நிய­மித்­துள்ளார். இவ் வழக்கு விசா­ர­ணை­யா­னது யாழ்ப்­பா­ணத்தின் சட்ட வலுவை மேலும் அதி­க­ரிக்கும் என்­பதில் எனக்கு நம்­பிக்­கை­யுண்டு.

குறித்த வழக்கில் உயி­ரி­ழந்­தது ஒர் பதி­னெ­டடு வய­தான பெண்­ணாகும். அவ­ரது இறப்பும் அதற்­கான கார­ணமும் முழு இலங்கை மக்­க­ளி­டை­யேயும் ஒர் அதிர்ச்­சி­யையும் பாரிய அதிர்­வ­லை­க­ளையும் தோற்­று­வித்­த­துடன் வடக்கில் குறிப்­பாக சட்ட நீதி ஒழுங்கில் பிறள்­வையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இச் சம்­ப­வம் பெற்றோர் மத்­தி­யிலும் மாண­வர்கள் மத்­தி­யிலும் பீதி­யையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. அந்­த­வ­கையில் இவ் சம்­பவம் தொடர்­பாக ஆரம்­பத்தில் ஊர்­கா­வற்­றுறை பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டி­ருந்­த­துடன் அதன் பின்னர் விசா­ர­ணை­களை குற்றப் புல­னாய்வு பிரி­வினர் மேற்­கொண்­டி­ருந்­தனர்.

இவ் குற்றச் செயல் தொடர்­பாக விசா­ரணை செய்­வது மிகுந்த கடி­ன­மா­கவே குற்றப் புல­னாய்வு பிரி­வி­ன­ருக்கு இருந்­தது. இவ் விசா­ர­ணையின் போது சட்­டமா அதிபர் அது தொடர்­பாக மேற்­பார்வை செய்­த­துடன் தேவை­யான போது ஆலோ­ச­னை­க­ளையும் வழங்­கி­யி­ருந்தார். அத­னூ­டாக இவ் விசா­ர­ணை­க­ளா­னது மிகவும் நுணுக்­க­மா­கவும் ஆழ­மா­கவும் நடாத்­தப்­பட்­டி­ருந்­தன. நீதியை நிலை நாட்ட வேண்டும் என்­பதில் குற்றப் புல­னாய்வு பிரி­வினர் மிகுந்த கவ­ன­மாக செயற்­பட்­டி­ருந்­தனர்.

இவ் குற்றச் செயல் தொடர்­பான சம்­மந்­தப்­பட்­ட­வர்­களை பாது­காப்­ப­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. அது தொடர்­பான விசா­ர­ணைகள் நடாத்­தப்­பட்­டுள்­ள­துடன் அதில் தொடர்­பு­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக பிறி­தொரு வழக்கும் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­படும். அந்­த­வ­கையில் இவ் வழக்­கா­னது சாதா­ரண ஒர் வழக்­கல்ல. சாதா­ரன ஒரு கூட்டு பாலியல் வல்­லு­றவு வழக்­கு­மல்ல.

அதா­வது இச்சம்பவமானது நன்கு திட்­ட­மி­டப்­பட்டு முன்­னரே இது தொடர்­பாக அறி­யப்­பட்டு மேற்­கொள்­ளப்­பட்ட ஒர் குற்றச் செய­லாகும். அந்­த­வ­கையில் இவ் குற்றச் செயலை நான் சர்­வ­தேச மயப்­ப­டுத்­தப்­பட்ட

குற்றச் செயல் என கூறு­வதற்கு தயங்க மாட்டேன்.அத்­தோடு இன்­னொரு குழு­வினர் இவ் குற்றச் செய­லூ­டாக நாட்டின் கௌர­வத்­திற்கும் சுய­ம­ரி­யா­தைக்கும் களங்கம் ஏற்­ப­டுத்த முயற்­சித்­துள்­ளார்கள்.

இவ் வழக்கின் சாட்­சிகள் சான்­றுகள் தொடர்­பாக பார்க்­கின்ற போது இவ் வழக்கின் சாட்­சிகள் சந்­தர்ப்ப சாட்­சி­க­ளா­கவும், சட்­டமா அதி­ப­ரது உத்­த­ர­வா­தத்தின் அடிப்­ப­டையில் எதி­ரி­களில் சிலர் அரச தரப்பு சாட்­சி­க­ளாக மாறி­ய­தையும் கொண்டு நிரூ­பிக்­கப்­ப­ட­வுள்ள வழக்­காகும்.

இதன்­படி இவ் வழக்கில் 1,2,3 ஆகிய எதி­ரிகள் ஒரே குடும்­பத்தை சேர்ந்­த­வர்கள், 4,9 ஆகிய எதி­ரிகள் சகோ­த­ரர்கள், 6,9 ஆகிய எதி­ரிகள் மச்சான் உறவு முறை­யினர். இந்­நி­லையில் இவர்கள் அனை­வரும் இணைந்து இக் குற்றத்தை புரிந்த காரணம் யாதெனில் ஆபாச வீடி­யோவின் நேரடி காட்­சியை (லைவ்) சர்­வ­தே­சத்­திற்கு விற்­பனை செய்­த­வற்­காகும்.

இவ் வழக்கின் ஒன்­ப­தா­வது எதிரி தனது மச்சான் உற­வி­ன­ரான 6ஆவது எதி­ரி­யுடன் தொடர்பு கொண்டு, சுவிஸ்­ஸர்­லாந்து நாட்டில் நேரடி ஆபாச பட காட்­சிக்கு ஒப்­பந்­த­மொன்று செய்­யப்­பட்­டுள்­ள­தாக கூறி­யுள்ளார். சர்­வ­தேச சந­தைக்கு தெற்­கா­சிய நாடு­களின் இளம் பெண்­களின் நேரடி (லைவ்) வீடியோ தேவை­யாக இருந்­தது. அத­ன­டிப்­ப­டை­யி­லேயே சுவிஸ்­ஸர்­லாந்து குடி­யு­ரி­மையை பெற்ற ஒன்­ப­தா­வது எதி­ரி­யுடன் ஒர் ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

அழ­கான இளம்­பெண்­களை கற்­ப­ழித்து பின்னர் இவர்­களை கொலை செய்து அதனை நேர­டி­யாக ஒளிப்­ப­திவு செய்­வது என்­ப­துவே இவர்­க­ளது திட்­ட­மாக இருந்­தது. இது விட­யங்கள் அனைத்­தையும் இவ் வழக்கின் ஒன்­ப­தா­வது எதிரி சிறைக்­கூட்டில் அவ­ரோடு சிறையில் இருந்த சக­பா­டிக்கு கூறி­யுள்ளார். அத்­துடன் ஒன்­ப­தா­வது எதிரி இவ் குற்றச் செயலில் இருந்து தப்பிச் செல்­வ­தற்கு பொலிஸ் அதி­காரி ஒரு­வ­ருக்கு 20 மில்­லியன் ரூபா

வரையில் இலஞ்சம் கொடுக்க முற்­பட்­டுள்ளார். இது தொடர்­பான சான்­றுகள் வழக்கின் சாட்சிப் பதி­வு­களின் போது சமர்­பிக்­கப்­படும்.

மேலும் இவ் வழக்கின் பிணைச் சோதனை அறிக்கை தொடர்­பாக பார்க்­கின்ற போது குறித்த பெண் உயி­ரி­ழந்­த­மைக்கு பல கார­ணங்கள் உள்­ளன. அவற்றில் குறித்த பெண்ணின் பிறப்­பு­றுப்பின் யோனி­மடல் அழி­வ­டைந்து பிறப்­பு­றுப்பின் உள்­ளேயும் வெளி­யேயும் பல காயங்கள் காணப்­ப­டு­வ­துடன் இது வன்­மை­யான கூட்டு பாலியல் வல்­லு­ற­வினால் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது எனவும் கூறு­கின்­றது.

யோனி­து­வா­ரத்­தினுள் மீண்டும் மீண்டும் ஆணு­றுப்பு உட் செலுத்தப்பட்டுள்ளதுடன் 5,6 ஆகிய எதிரிகள் மாறி மாறி தமது  செயற்பாட்டை வீடியோ படம் எடுத்து அதனை ஒர் வடிவமாக உருவாக்க முற்பட்டுள்ளார்கள். இவ்வாறு எடுக்கப்பட்ட தொலைபேசி அழிக்கப்பட்டாலும் வீடியோ படம் விற்பனை செய்யப்பட்டமையை சான்றுகள் மூலம் தெரியப்படுத்த முடியும்.

இதேவேளை இவ் வழக்கினால் வழங்கப்படுகின்ற தீர்ப்பானது குற்றவாளிகளுக்கும், பொது மக்களுக்கும் ஒர் செய்தியை தெரிவிக்கும் எனவும், இவ் நீதிமன்றம் அனைவரது உரிமைகளையும் உரித்துக்களையும் பாதுகாத்து விரைவாக இவ் வழக்கை விசாரணை செய்து நீதியை வழங்கும் என தாம் நம்புவதாகவும் பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டீ லிவேறா தனது ஆரம்ப உரையில் தெரிவித்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:17:29
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29