2020 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் 100, 200 மீற்றர் ஓட்டப் பந்தயத்தை பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்து பார்ப்பேன் என்று பிரபல ஓட்டப்பந்தய சம்பியன் வீரர் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.
உலகின் அதிவேக ஓட்டப் பந்தய வீரராக வலம்வருகிறார் உசைன் போல்ட். ஜமைக்காவை சேர்ந்த அவர் 100, 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் உலக சாதனையாளராக இருக்கிறார்.
100 மீற்றரை 9.58 விநாடியிலும், 200 மீற்றரை 19.19 விநாடியிலும் கடந்து சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் 8 தங்கப் பதக்கங்களை வென்று இருக்கிறார்.
தற்போது செக்.குடியரசில் நடைபெறவுள்ள உலக தடகள போட்டியில் பங்கேற்க சென்றுள்ள அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.
அதன்போது உசைன் போல்ட் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்,
நான் சிறந்த பெறு பேறுகளை பெற்றிருக்கிறேன். எனக்கு என்ன தேவையோ அவை அனைத்தையும் செய்து விட்டேன். தற்போது அது முடிவுக்கு வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
லண்டனில் நடைபெறவுள்ள உலக தடகள சம்பியன் போட்டியில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறேன். அப்போட்டி எனக்கு உணர்வுபூர்வமாக இருக்கும்.
அடுத்த ஒலிம்பிக் போட்டியில் 100, 200 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பார்வையாளனாக அமர்ந்து பார்ப்பேன். தற்போது நிறைய இளம் வீரர்கள் வருகிறார்கள். இதில் யார் பட்டத்தை வெல்வார்கள் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM