87ஆவது சேர். ஜோன் டாபர்ட் பாடசாலை மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளில் இம்முறை 7000 இற்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
சேர். ஜோன் டாபர்ட் பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளுக்கு தொடர்ச்சியான 6ஆவது ஆண்டாக அனுசரணை வழங்க ரிட்ஸ்பரி முன்வந்துள்ளது.
இவ்வாண்டு நடைபெறவுள்ள சேர்.ஜோன் டாபர்ட் மெய்வல்லுநர் போட்டிகளில் 7000 இற்கும் அதிகமான பாடசாலை மெய்வல்லுநர் வீரர்கள் பங்குபற்றுகின்றனர்.
இந்த ஆண்டு, ஏற்பாட்டாளர்களான இலங்கை பாடசாலை மெய்வல்லுநர் சம்மேளனம் கனிஷ்ட சம்பியன்ஷிப் நிகழ்வை மீளமைப்பு செய்திருந்தது.
அதற்காக, போட்டிகள் நடைபெற்ற மூன்று வலயங்களில் பங்குபற்றுநர்கள் மூன்று சுற்றுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
அதன்படி 2ஆம் சுற்று, இம்மாதம் 30 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜுலை 1ஆம் திகதி வரை ஹங்வெல்ல, ரோயல் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகின்றது. இதில் தென் மற்றும் மேல் மாகாணங்களின் வீரர்கள் பங்கேற்கின்றனர்.
ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாண பாட சாலைகளுக்கான போட்டி கள், நாவலப்பிட்டி ஜயதிலக மைதானத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி முதல் 6ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன.
இறுதிப் போட்டிகள், கண்டி போகம்பர மைதானத்தில் செப்டெம்பர் 23 முதல் 25ஆம் திகதி வரை நடைபெறும். மொத்தமுள்ள 54 விளையாட்டுப் பிரிவு களில் ஒவ்வொன்றிலும் 64 வீர வீராங்கனைகள் வீதம் தேர்வு செய்யப்பட்டு இறுதிப்போட்டி நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM