இலங்கையில் அரசியலமைப்பு மறுசீரமைப்பை முன்னெடுக்கவேண்டுமென நான் அழுத்தம் பிரயோகிப்பதாகவும் எனவே, எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் இலங்கையின் முன்னாள் பிரதி அமைச்சர் சரத் வீரசேகர ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைத் தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளார் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையில் சர்வதேச மனித உரிமை சட்டமானது அனைவருக் கும் ஓர் இலகுவான இலக்காக காணப்படு வதாகவும் செயிட் அல் ஹுசைன் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் செயிட் அல் ஹுசைன் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மனித உரிமை சட்டங்களை திருத்தியமைப்பதற்கு கூட தான் தயங்கமாட்டேன் என அண்மையில் பிரிட்டன் பிரதமர் திரேசா மே கூறியிருந்தார். அதாவது பயங்கரவாத சந்தேகநபர்களின் நடமாடும் சுதந்திரத்தில் கட்டுப்பாடுகளை கொண்டுவரவேண்டியது அவசியம் என அவர் கூறியிருந்தார்.
அதேபோன்று அண்மையில் பிரிட்டிஷ் பிரதமர் திரேஸாவை மேற்கோள்காட்டி முன்னாள் பிரதி அமைச்சர் சரத் வீரசேகர இலங்கையில் அரசியலமைப்பு மறுசீரமைப்பை முன்னெடுக்கவேண்டுமென நான் அழுத்தம் பிரயோகிப்பதாகவும் எனவே எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மகஜர் கையளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைத் தலைவருக்கே அந்த மகஜரை கையளித்துள்ளார்.
அரசாங்கங்கள் பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கு பயங்கரவாதிகளை தேடி சென்று நடவடிக்கை எடுக்கவேண்டும். தற்போதைய நிலைமையில் சர்வதேச மனித உரிமை சட்டமானது ஒரு இலகு வான இலக்காக மாறியுள்ளது என்று குறிப் பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM