பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தபால்துறை ஊழியர்கள் இன்றும் பணிநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
நுவரெலியா, கண்டி, காலி, கோட்டை தபால் நிலைய கட்டிடங்களையும் அதன் காணியினையும் இந்தியாவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே அத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். அத்துடன் தபால் சேவை ஊழியர்கள் நீண்ட காலம் எதிர்கொள்ளும் நிர்வாக ரீதியிலான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே பணி பகிஷ்கரிப்பில் இறங்கவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் சேவை தொழிற்சங்க முன்னணியின் இணை அமைப்பாளர் எச்.கே. காரியவசம் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையிலுள்ள தபால் திணைக்களம் மிகவும் ப.ைழமைவாய்ந்த திணைக்களமாகும். எனினும், அரசாங்கம் தபால்துறையையும் தபால் சேவையாளர்கள் மீதும் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. சரித்திர முக்கியத்துவம்வாய்ந்த நுவரெலியா, கண்டி, காலி கோட்டை தபால் நிலைய கட்டிடங்களையும் காணியினையும் இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆகவே, அரசாங்கம் அத்திட்டத்தை கைவிட்டு நாட்டிலுள்ள தபாலகங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தபால் துறை ஊழியர்கள் நீண்ட காலமாக நிர்வாக ரீதியிலான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். எனினும், அதற்கு இதுவரையில் எவ்விதத் தீர்வும் முன்வைக்கவில்லை.
கடந்த ஆட்சியின் போதும் இது தொடர்பிலான கோரிக்கை முன்வைத்தோம். நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரும் இது தொடர்பில் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.
அதன்போது குறித்த பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு முன்வைப்பதாக வக்குறுதியளிக்கப்பட்டது. ஆயினும் இதுவரையில் தீர்வு முன்வைக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் பிரதான 3400 க்கும் அதிகமான அஞ்சலகங்களில் இந்த பணிநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM