இலங்கை அணியின் புதிய பயிற்சியாளர் நியமனம் தொடர்பில் மூன்று பேரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி பங்களாதேஷ் பயிற்சியாளரான இலங்கை அணியின் முன்னாள் வீரர் சந்திக்க ஹத்துருசிங்கவிடமும், நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டீபன் பிளமிங்குடனும், அவுஸ்திரேலிய வீரர் டொம் மூடியுடனும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இம்மாத இறுதியில் சிம்பாப்வே அணியுடனான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஒரேயொரு டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி விளையாடுகிறது. இந்தத் தொடருக்காக இடைக்கால பயிற்சியாளராக தற்போதைய இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்சியாளரான நிக் போத்தஸ் நியமிக்கப்படலாம் என்றும், அதேவேளை ஒருநாள் தொடருக்கான துடுப்பாட்ட பயிற்சியாளராக முன்னாள் வீரர் அவிஷ்க குணவர்தன மற்றும் டெஸ்ட் போட்டிக்கான துடுப்பாட்ட பயிற்சியாளராக ஹஷான் திலகரத்ன ஆகியோர் நியமிக் கப்பட வாய்ப்பிருப் பதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
இதேவேளை, இலங்கைக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயற்பட்டு வந்த கிரஹம் போர்ட் தன் பதவியிலிருந்து இராஜினாமா செய்ததையடுத்து, புதிய பயிற்சியாளராக முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகின.
இந்தத் தகவலை மறுத்துள்ள மஹேல தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பயிற்சியளிப்பதிலேயே தற்போது கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM