விலைமதிக்க முடியாத ஆபரணங்களுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

Published By: Priyatharshan

27 Jun, 2017 | 11:47 AM
image

விலைமதிக்க முடியாத தங்கம் மற்றும் வைரம் கலந்த ஆபரணங்களுடன் சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான  நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபர் தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து விலைமதிக்க முடியாத தங்கம் மற்றும் வைரம் கலந்த ஆபரணங்களை சட்டவிரோதமாக கடத்திவர முற்பட்டவேளை  இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஹொரணை, பண்டாரகமயைச்  சேர்ந்த நபரென ஆரம்பகட்ட விசாரணைகளில் இருநு்து தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் இதற்கு முன்னரும்  சட்டவிரோதமாக இவ்வாறான பொருட்களை இலங்கைக்கு கடத்திவந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த ஆபரணங்களின் நிறை மற்றும் விலை என்பனவற்றை சரியாக தெரிவிக்க முடியாதென தெரிவிக்கும் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55