காதலனால் கடத்தப்பட்ட யுவதி விபத்தில் சிக்கி பலி : இருவர் கைது, இருவர் வைத்தியசாலையில் - காரணம் வெளியாகியது

Published By: Priyatharshan

26 Jun, 2017 | 03:08 PM
image

சந்­தி­வெளியில் கடத்­தப்­பட்டு விபத்தில் சிக்கி யுவ­தி மர­ணித்த சம்­பவம் தொடர்­பாக இருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி சப் இன்ஸ்­பெக்டர் நிரோ ஷன் பெர்­னாண்டோ தெரி­வித்தார்.

வெள்ளிக்­கி­ழமை இரவு ஏறாவூர் பொலிஸ் பிரி­வி­லுள்ள சந்­தி­வெளி மட்­டக்­க­ளப்பு  கொழும்பு நெடுஞ்­சா­லையில் இடம்­பெற்ற அசம்­பா­வித சம்­ப­வ­மொன்றில் மட்­டக்­க­ளப்பு ஏரிக்­கரை வீதியை சேர்ந்த ஸ்ரீதரன் திவ்­ய­சா­கரி (வயது 19) எனும் யுவதி தலையில் படு­கா­ய­மேற்­பட்டு மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த சமயம் சிகிச்சை பலனின்றி சனிக்­கி­ழமை காலை உயி­ரி­ழந்­த­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

இச்­சம்­ப­வம்­பற்றி பற்றி பொலிஸார் மேலும் தெரி­விக்­கையில், 

வெள்ளிக்­கி­ழமை இரவு திரு­கோ­ண­மலை திருக்­கோ­ணேஸ்­வரம் கோயி­லுக்குச் சென்­று­விட்டு காரில் திரும்பிக் கொண்­டி­ருக்­கையில் இரவு 10 மணி­ய­ளவில் தேநீர் அருந்­து­வ­தற்­காக சந்­தி­வெளியில் கார் நிறுத்­தப்­பட்­டுள்­ளது.

அந்தக் காரில் மேற்­படி அசம்­பா­வி­தத்தில் பலி­யான யுவதி, அவரின் தாய் ஷோபனா ஸ்ரீதரன் (வயது 52), யுவ­தியின் பெரி­யப்பா தவ­ராஜா வசந்­த­ரா­ச­பிள்ளை (வயது 66), கார்ச் சார­தி­யான மாணிக்­க­வா­சகர் பகி­தரன் (வயது 35) ஆகியோர் இருந்­துள்­ளனர்.

அந்­நேரம் அங்கு திடீ­ரென மோட்டார் சைக்­கிளில் வந்­தி­றங்­கிய இரண்டு இளை­ஞ ர்கள் யுவ­தியை பிடித்து மோட்டார் சைக்கிள் ஆச­னத்தின் நடுவில் ஏற்றிக் கொண்டு அதி­வே­க­மாக பய­ணித்­துள்­ளனர்.

அவ்­வே­ளையில் யுவ­தியின் தாய் மற்றும் பெரிய தந்தை ஆகியோர் தாம் வந்த காரில், யுவ­தியை கடத்திக் கொண்டு அதி­வே­க­மாக செல்லும் மோட்டார் சைக்­கிளை பின்­தொ­டர்ந்­துள்­ளனர்.

இவ்­வே­ளையில் அதி­வே­க­மாகச் சென்று கொண்­டி­ருந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி­யதால் விபத்து சம்­ப­வித்­துள்­ளது.

அச்­சம்­ப­வத்தில் கடத்­தப்­பட்ட யுவ­தியும், கடத்தி சென்­ற­தாகக் கூறப்­படும் இரண்டு இளை­ஞர்­களும் பலத்த காய­ம­டைந்­துள்­ளனர்.

காய­ம­டைந்த மூவரும் உட­ன­டி­யாக அரு­கி­லுள்ள சந்­தி­வெளி பிர­தேச வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு பின்னர் மேல­திக சிகிச்­சைக்­காக மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டனர்.

அவ்­வே­ளை­யி­லேயே சிகிச்சை பெற்­று­வந்த யுவதி சிகிச்சை பல­னின்றி சனிக்­கி­ழமை மர­ண­மா­கி­யுள்ளார்.

யுவ­தியைக் கடத்தி சென்­ற­தாகக் கூறப்­படும் காயங்­க­ளுக்­குள்­ளான இளை­ஞர்­க­ளான பால­சிங்கம் சஞ்­ஜீவன் (வயது 20) பிர­தீபன் திவ்­வி­ய­கேஷன் (வயது 20) ஆகியோர் மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர்.

இதே­வேளை யுவ­தி­யையும் தங்கள் இரு­வ­ரையும் காரில் வந்­த­வர்கள் காரால் மோதியும் அதன் பின்னர் கடு­மை­யாக தாக்­கி­யதன் கார­ண­மா­கவும் தாங்கள் படு­கா­யங்­க­ளுக்­குள்­ளா­ன­தாக மோட்டார் சைக்­கிளில் பய­ணித்த இளை­ஞர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

அந்த வாக்­கு­மூ­லத்­தின்­படி காரில் வந்த யுவ­தியின் பெரி­யப்­பா­வான வசந்­த­ரா­ச­பிள்ளை மற்றும் கார் சார­தி­யான பகி­தரன் ஆகியோர் கைது செய்­யப்­பட்டு ஏறாவூர் சுற்­றுலா நீதிவான் நீதி­மன்ற பதில் நீதிவான் வினோபா இந்­திரன் முன்­னி­லையில் சனிக்­கி­ழமை ஆஜர் செய்யப்­பட்­ட­போது சந்­தேக நபர்­களை ஜுலை மாதம் 07ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

இதே­வேளை யுவ­தியின் உடற் கூற்றுப் பரி­சோ­தனை நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை குரு­ணாகல் பொது வைத்­திய­சாலை சட்ட வைத்­திய அதி­ காரி இலங்­க­ரத்­ன­வினால் குரு­நா­கலில் மேற்­கொள்­ளப்­பட்­டது.

இத­னி­டையே குறித்த யுவ­திக்கும் இளை­ஞ­னுக்கும் ஏற்­கெ­னவே பல வரு­டங்­க­ளுக்கு முன்னர் பரா­ய­ம­டை­யாத வயதில் இருந்து வந்த காதல் தொடர்பு கார­ண­மாக மட்­டக்­க­ளப்பு பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு பதிவு செய்து வழக்கு தொட­ரப்­பட்டு சம­ர­ச­மாக தீர்த்து வைக்­கப்­பட்ட நிலையில் குறித்த யுவ­தியை உயர் கல்­விக்­காக அவ­ரது தாய் இந்­தி­யா­வுக்கு அனுப்பி வைத்­துள்ளார் என்­கின்ற விவ­ரமும் விசா­ர­ணை­களின் போது தெரிய வந்­துள்­ளது.

குறித்த யுவதி சமீப சில நாட்­க­ளுக்கு முன்னர் இலங்கை திரும்­பி­யி­ருந்த நிலை­யி­லேயே மேற்­படி சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

அந்த யுவதி இந்­தி­யா­வி­லி­ருக்கும் போதும் தொடர்ந்தும் தனது காதலனுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார் என்பதும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ள தாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸின் வழிநடத்தலில் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்ஸ்பெக்டர் நிரோஷன் பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் சார்ஜன்ற் ஈ.எல். பதூர்தீன் ஆகியோர் தலை மையிலான பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38