நோன்புப் பெருநாள் எமது மக்களிடையே சமாதானம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை மேலும் வலுவாக்குவதாக அமைய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள நோன்புப் பெரு நாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை வாழ் அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் எனது இதயங்கனிந்த ரமழான் பெருநாள் வாழ்த்துக்கள். புனித ரமழான் மாதத்தின் நிறைவை நினைவுகூரும் முகமாக இந்த நாளை நாம் கொண்டாடுகின்றபோது, இப்பண்டிகையின் பாரம்பரியத்தை போற்றும்வகையில், சகோதரத்துவ உணர்வோடு நாம் பகிர்ந்து கொள்ளும் அதேவேளை இல்லாதவர்கள் மேல்காட்டும் கரிசனையையும் எமது சிந்தையில் கொள்வோமாக.
இந்த பெருநாளை கொண்டாடும் இத்தருணத்தில், எமது தேசத்தின் நல்லுறவிற்கான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்துவதுடன், நாட்டின் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக்காட்டவும் செயற்படுவோமாக.
இந்த ரமழான் பண்டிகையானது, எமது மக்களிடையே சமாதானம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை மேலும் வலு வாக்குவதாக அமைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM