ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற ரீதியில் எமது அரசியல் செயற்பாடுகள் அனைத்திற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆதரவு வழங்குவார் என மஹிந்த ஆதரவு எம்.பி.யான தினேஷ் குணவர்தன நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்திற்கு மஹிந்த ராஜபக்ஷ எதிர்ப்பினை தெரிவித்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமையே எமது புதிய கட்சி ஒன்றை ஸ்தாபிப்பதற்கான அடித்தளம் எனவும் சுட்டிக்காட்டினார்.
தேசிய அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்புக்கு தனது பூரண ஆதரவினை வழங்குவதாக மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்திருந்தார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியிருந்த நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய தேசியக்கட்சியின் அரசாங்கத்திற்கு எதிரான எமது செயற்பாடுகள் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தொடரும். அந்தவகையில் பொது எதிரணியில் சிலர் தேசிய அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக போலியான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
பொது எதிரணியின் செயற்பாடுகள் தொடர்பில் இந்த அரசாங்கம் பெரும் அளவு அச்சப்படுகின்றது.
பொது எதிரணியின் அனைத்துவிதமான செயற்பாடுகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆதரவு வழங்குவார். இது தொடர்பில் எவ்வித சந்தேகமும் கிடையாது.
அந்தவகையில் ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்னெடுக்கப்படும் சில செயற்பாடுகள் எமது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இது தொடர்பில் நாம் மக்களை தெளிவுபடுத்துவோம்.
மறுபுறம் புதிய அரசியல் அமைப்பிலும் எமது சமூகத்தை பாதிக்கும் வகையில் பல்வேறு விடயங்கள் கொண்டுவரப்படவுள்ளது. அந்தவகையில் இவற்றில் மாற்றங்களை கொண்டுவராவிடின் தொடர்ந்தும் இதற்கு எதிர்ப்பினை தெரிவிப்போம்.
இவற்றில் மாற்றங்களை கொண்டுவராவிடின் புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்குவது தவிர்க்க முடியாது. கடந்த காலங்களில் தேசிய அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்திற்கு மஹிந்த ராஜபக் ஷ எதிர்ப்பினை தெரிவித்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமையே எமது புதிய கட்சி ஒன்றை ஸ்தாபிப்பதற்கான அடித்தளம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM