நாட்டின் பல பாகங்களிலும் உள்ளவர்களின் கைத் தொலைபேசிக்கு வெளிநாட்டு இலக்கங்களிலிருந்தும் ஒருமுறை மாத்திரம் ஒலித்து ஓயும் அழைப்புகள் வருவதாகவும் அது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் பாவனையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
ஒரு தடவை மாத்திரம் ஒலித்து தொல்லை செய்யும் இவ்வழைப்பு ‘வன் ரிங் ஸ்கேம்’ என அழைக்கப்படுகின்றது.
மேற்குறித்த தொலைபேசி அழைப்பு மோசடியான அழைப்பென்று கூறப்படுகின்றது.
அவ்வாறான அழைப்புகள் தொலைபேசி உரிமையாளரின் ஆவலைத் தூண்டுவதாக அமையும். சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியொன்றில் இவ்வாறான சூழ்ச்சியில் சிக்கும் கைத்தொலைபேசி உரிமையாளர்கள் தொலைபேசி இணைப்புக்கு மாத்திரம் 19.95 அமெரிக்க டொலரை செலவிடுவதாகவும் அதைவிட உரையாடல் இடம்பெறும் காலத்திற்காக 9 அமெரிக்க டொலரை செலவிடுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
சில வேளைகளில் உங்களுக்கு தெரியாத இலக்கங்களில் இருந்து குறுஞ் செய்திகள் கிடைக்கக் கூடும்.
அவ்வாறான செய்திகள் அநேகமானவற்றில் ‘தயவு செய்து விரைவில் மீண்டும் அழையுங்கள்’ என குறிப்பிடப்பட்டிருக்கும். இவ்வாறான குறுஞ் செய்திகளுக்கு பதில் அளிக்கும்போது மேலே குறிப்பிட்ட விதமே அனைத்தும் இடம்பெறும்.
மோசடியான அழைப்புகள் எமது நாட்டுக்கு எந்த நாட்டிலிருந்து கிடைக்கின்றன? அவற்றின் இலக்கக் குறியீடுகள் என்ன என்பது தற்போது அறியப்பட்டுள்ளது.
அதன்படி புரூண்டி, மலாவி, பாகிஸ்தான் மற்றும் பெலரூசியா இராச்சியங்கள் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து பலருக்கு மோசடியான அழைப்புகள் கிடைத்துள்ளன.
+268, 809, 876, 872, 254 மற்றும் 473 என்னும் இலக்க குறியீட்டுகளிலிருந்து கிடைக்கும் அழைப்புகள் மோசடியானவை என அறியப்பட்டுள்ளது.
இதைத் தவிர அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவு இராச்சியத்திலிருந்தும் அழைப்புகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான மோசடியான உபாயங்களிலிருந்து தப்புவதற்கு கைத்தொலைபேசி பாவனையாளர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் அவ்வாறான அழைப்புகள் குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும்.
தான் இதுவரை அறியாத சர்வதேச தொலைபேசி இலக்கங்களிலிருந்து அழைப்பொன்று வந்து தவிர்க்கப்பட்டிருந்தால் அந்த இலக்கத்துக்கு மீண்டும் அழைப்பை ஏற்படுத்த வேண்டாமென தொலைத்தொடர்பு துறையைச் சேர்ந்த நிபுணர்கள் அறிவுறுத்துகின்றார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM