கொட்டதெனியாவ பிரதேச்தில் தாயொருவர் மீதும் அவரது இரு பிள்ளைகள் மீது நபரொருவர் மேற்கொண்ட கொடூரத் தாக்குதலில் பிள்ளையெருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தாக்குதல் மேற்கொண்ட நபர் குறித்த பெண்ணுடன் தவறான தொடர்பு கொண்டிருந்தவர் என தெரியவந்துள்ளது. இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இரண்டு பிள்ளைகளும், தாயும், மீரிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 வயது பெண் பிள்ளையொன்று உயிரிழந்துள்ளது.
தற்போது தாக்குதலுக்குள்ளான தாயும் மற்றைய பிள்ளையும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கத்தியால் குறித்த தாக்குதலை மேற்கொண்டதாகவும் இவ்வாறு தாக்குதலுக்குள்ளான தாய் மற்றும் பிள்ளைகளும் ஹெலகம - கிதுல்வல பிரதேசத்தை சேர்ந்தவர்களெனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த தாய்கும் சந்தேக நபருக்கும் இடையே காணப்பட்ட தவறான உறவே தாக்குதல் மற்றும் கொலைக்கான காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய கொட்டதெனியாவ பிரதேசத்தை சேர்ந்த 47 வயதான சந்தேக நபர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை கொட்டதெனியாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM