ஜனாதிபதிக் கிண்ண மைலோ றக்பித் தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு சென்.ஜோசப் கல்லூரி அணியும் இசிபதன கல்லூரி அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
25ஆவது ஜனாதிபதிக் கிண்ண மைலோ றக்பித் தொடரில் ஏழு அணிகள் களம் கண்டிருந்தன. நொக் அவுட் முறையில் நடைபெற்ற இந்தப் போட்டித் தொடரில் இறுதிப் போட்டிக்கு முதன்முறையாக கொழும்பு சென்.ஜோசப் கல்லூரி அணி தகுதிபெற்றது. மறுமுனையில் அதிக தடவைகள் மைலோ றக்பி கிண்ணத்தை வென்றுள்ள இசிபதன அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் விறுவிறுப்பான இறுதிப் போட்டி இன்று கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பாடசாலைகளுக்கிடையிலான குறித்த போட்டியானது இம்முறை 25ஆவது வருடப் பூர்த்தியைக் கொண்டாடுகின்றது.
இத்தருணத்தை மேலும் அலங்கரிக்கும் விதமாக கடந்த 25 வருடங்களில் சம்பியனான அணிகளின் தலைவர்கள் மட்டும் மோதும் கண்காட்சிப் போட்டி ஒன்றும் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
மைலோ வைட் மற்றும் மைலோ கிரீன் என இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள முன்னாள் அணித் தலைவர்கள் இன்றைய இறுதிப் போட்டிக்கு முன்பாக நடைபெறவுள்ள போட்டியில் மீண்டும் களம் காணவுள்ளனர்.
இவ்வருடத்திற்கான மைலோ றக்பித் தொடரின் இறுதிப் போட்டி மின்னொளியில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதன்முறையாக முன்னேறியுள்ள கொழும்பு சென்.ஜோசப் கல்லூரி அணி வெற்றிவாகை சூடுமா அல்லது 7முறை சம்பியன் பட்டம் வென்ற இசிபதன கல்லூரி அணி தனது சம்பியன் கணக்கை அதிகரித்துக் கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM