கள்ளக்காதலனுடன் இணைந்து கணவரை கொலைசெய்ய முயன்ற பெண் கைது 

Published By: Priyatharshan

18 Jan, 2016 | 09:23 AM
image

ஐந்து ஏக்கர் நிலத்தை அப­க­ரிப்­ப­தற்­காக கள்ளக் காத­லனுடன் இணைந்து கண­வரை கைக்குண்டு வீசி கொலை செய்ய முயன்ற பெண்ணை நீர்­கொ­ழும்பு பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

கள்ளக் காதலன் கைக்குண்டு தாக்­குதல் நடத்­தப்­பட்ட அன்று இத்­தா­லிக்கு தப்பிச் சென்­றுள்­ள­தாக விசா­ர­ணை­க­ளின்­போது தெரி­ய­வந்­துள்­ளது.

நீர்­கொ­ழும்பு ஸ்ரீ விக்­கிர­ம­ரா­ஜ­சிங்க மாவத்­தையைச் சேர்ந்த 42 வயது என்ற பெண்ணே கைது செய்­யப்­பட்­டுள்ள சந்­தேக நப­ராவார். கடந்த மூன்றாம் திகதி இரவு நீர்­கொ­ழும்பு குரணை பிர­தே­சத்தில் இடம்­பெற்ற கைக்குண்டு வீச்சுத் தாக்­கு­தலில் காயங்­க­ளுக்கு உள்­ளாகி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டவர் சந்­தேக நபரின் கண­வ­ராவார்.

இச்­சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரிய வரு­வ­தா­வது,

சந்­தேக நப­ரான பெண்ணும் அவ­ரது கண­வரும் அவர்­க­ளது இரண்டு பிள்­ளை­க­ளுடன் இத்­தா­லியில் தொழி­லுக்­காக சென்று வசித்து வந்­துள்­ளனர். அங்கு வசிக்கும் இலங்­கையைச் சேர்ந்த நப­ருடன் அவர்­க­ளுக்கு நெருங்­கிய பழக்கம் ஏற்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் சந்­தேக நப­ரான பெண்­ணுக்கும் குறித்த நப­ருக்கும் இடையில் கள்­ளத்­தொ­டர்பு ஏற்­பட்­டுள்­ளது.

அந்தக் குடும்­பத்­தினர் இலங்கை திரும்­பிய பிறகும் இந்தத் தொடர்பு தொடர்ந்­துள்­ளது. கைக்குண்டு தாக்­கு­த­லுக்கு உள்­ளான கண­வ­ருக்கு மாதம்பை பிர­தே­சத்தில் ஐந்து ஏக்கர் காணி ஒன்று உள்­ளது. அவர் காணி­களை விற்­பனை செய்யும் வர்த்­த­க­ராவார். அந்த காணியை அப­க­ரிக்கும் நோக்கில் தனது கள்ளக் காத­ல­னுடன் இணைந்து மனைவி திட்டம் தீட்­டி­யுள்ளார். அதன்­படி இத்­தா­லி­யி­லி­ருந்து ரவி சம்பத் இலங்கை வந்­துள்ளார். அவர்கள் இரு­வரும் இணைந்து கண­வனை கொலை செய்­வ­தற்கு இரண்டு நபர்­க­ளுக்கு கொந்­த­ராத்து வழங்­கி­யுள்­ளனர். இரண்டு இலட்சம் ரூபா பணம், இரண்டு வீடுகள், இத்­தா­லியில் தொழில்­வாய்ப்பு என்­ப­வை­களே அந்த ஒப்­பந்­த­மாகும்.

பிலி­யந்­தல பிர­தே­சத்தைச் சேர்ந்த ஒரு­வ­ரும் ­பட்­டு­வெல்­லே­கமை பிர­தே­சத்தைச் சேர்ந்த ஒரு­வரும் என இரு சந்­தேக நபர்­க­ளுக்கே கண­வனை கொலை செய்யும் கொந்­த­ராத்து வழங்­கப்­பட்­டுள்­ளது.

சந்­தேக நபர்கள் இரு­வரும் கண­வ­னுக்கு சொந்­த­மான காணியில் உள்ள மரங்கள் சில­வற்றைத் தறித்து அவற்றை தாங்கள் வாங்­கு­தாக அவ­ருடன் பேசி­யுள்­ள­தோடு ஒரு தொகை பணத்­தையும் முற்­ப­ண­மாக வழங்­கி­யுள்­ளனர். மிகு­திப்­ப­ணத்தை வழங்­கு­வ­தற்­காக கட்­டு­நா­யக்கஇ குரணை பராக்­கி­ரம வீதி அருகில் வரு­மாறு கூறி­யுள்­ள­னர். அவ்­வாறு பணத்தைப் பெற்றுக் கொள்­வ­த­ற்­காக கடந்த மூன்றாம் திகதி இரவு வந்­த­போதே மோட்டார் சைக்­கிளில் வந்த சந்­தேக நபர்கள் இரு­வரும் கைக்குண்­டொன்றை கண­வரின் மீது வீசி தாக்­குதல் நடத்­தி­விட்டு தப்பிச் சென்­றுள்­ளனர்.

இந்த சம்­ப­வத்­தின்­போது காய­ம­டைந்த கணவர் நீர்­கொ­ழும்பு மாவட்ட வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார். கைகுண்டு வீச்­சினால் வீதியில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த வாக­னங்கள் சில­வற்­றுக்கும் சேதம் ஏற்­பட்­டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27