ரமழான் மாதத்தின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்தும் வகை யில் தம் மீதான வன்முறைகளின் போது முஸ் லிம் மக்கள் பொறுமை காத்ததற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்தார்.
பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற இப்தார் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரமழான் மாதத்தை நாம் பக்தி, பொறுமை மற்றும் கருணையுடன் கடக்கின்றோம். குறிப்பாக தற்போதைய ரமழான் காலத்தில் தம்மை ஏசினாலும் தம்மீது தாக்குதல் நடத்தினாலும் முஸ்லிம் மக்களின் பொறுமைக்காக நான் நன்றி கூறுகின்றேன்.
விசேடமாக ரமழான் பண்டிகையின் உண்மையான அர்த்தம் இதனால் வெளிப்படுகின்றது. அத்துடன் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இஸ்லாமியர்கள் தமது பண்டிகையினையும் கொண்டாடாமல் பணத்தை வழங்கிவைத்தார்கள்.
இலங்கையர்களுக்காகவே அந்தப் பணத்தை வழங்கினார்கள். பாதிக்கப்பட்ட கிராமங்களில் அதிகமாக சிங்கள மக்களே வசித்தார்கள். எனவே அதற்கும் இங்கு நான் நன்றி கூற வேண்டும். இவ்வாறிருக்கின்ற போது ஒரு மதம் உருவாகியுள்ளதை அந்த மதத்தைப் பின்பற்றுவர்கள் மட்டுமன்றி அதன் தோற்றத்தை நம்புகின்றவர்களும் ஏற்றுக்கொள்வார்கள். அதனால் மதம் என்பது நல்லிணக்கத்தின் ஒரு பகுதியாகின் றது.
நாம் இஸ்லாம் மற்றும் புத்த தர்மத்தால் மனிதர்களின் மனங்களை சுகப்படுத்தவே முனைகின்றோம். அதனால் உலக மக்களை சுகப்படுத்தவும் எதிர்பார்க்கின்றோம். அதனையே நபிகள் மற்றுமொருவரை மனதளவிலும் உடல் ரீதியிலும் துன்புறுத்தாமல் இருக்கின்றவரையே அல்லாஹ் ஏற்றுக்கொள்வார் என்று கூறியுள்ளார்.
அதேபோல் புத்த மதத்திலும் மற்றவருக்கு நெருக்கடி கொடுக்காமலும் உயிரை பறிக்காமலும் இருக்க வேண்டும் என்ற போதனைகள் உள்ளன. அதனால் நாங்கள் எல்லா மதத்தையும் மதிக்கின்றோம்.
இஸ்லாமில் ஒரு கூற்று உள்ளது. (உங்கள் மதம் உங்களுக்கு. எமது மதம் எமக்கு என்பர்) அதற்கமையவே இன்று நாங்கள் செயற்படுகின்றோம். அதனையே அசோக மன்னனும் நாம் சகல மதங்களையும் மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதனால் மனதில் குரோதங்களை கொண் டவர்கள் புத்த மதத்தின் போர்வையில் மறைந்து பாதுகாப்பு பெற முடியாது. அவ்வாறானவர்களுக்கு பாதுகாப்புக் கொடுக்க வும் முடியாது. இன்று சகல மக்களும் இணைந்து சகவாழ்வை உருவாக்க முனைகின்றார்கள்.
அதற்காகவே சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துகின்றோம். அதனால் எந்த ஒரு நபரும் சட்டத்திற்கு அப்பால் சென்று செயற்பட முடியாது. எனவே சகலரும் சட்டத்தை மதித்து செயற்பட வேண்டியது அவசியமாகும். இன்று நாட்டு மக்கள் ஒன்றிணைந்து கொண்டிருக்கின்றார்கள்.
எனவே முஸ்லிம் மக்கள் இந்த நாட்டில் சமாதானத்தை உண்டுபண்ண மேற் கொண்ட முனைப்புக்களுக்கும் நன்றி கூற வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM