உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்த 37 வயது பெண் கடந்த பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தெரிந்த நபர் ஒருவர் அவரது நண்பரும் சேர்ந்து அவரை வீட்டில் விடுவதாக வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்று துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இது குறித்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு அளிக்க சென்ற போது முறைப்பாட்டினை வாங்க அங்கிருந்த உதவி பொலிஸ் அதிகாரி ஜெய் பிரகாஷ் சிங் மறுத்துள்ளார். இதை தொடர்ந்து பாதிக்கபட்ட பெண் உள்ளூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கடந்த பெப்ரவரி 21 ஆம் திகதி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகள் அமீர் அகமது ( வயது 55) சத்தார் அகமது( 45 ) ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பாதிகப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தையும் நீதிபதி பதிவு செய்தார்.
பாதிக்கப்பட்ட பெண் கூறும் போது நான் முறைப்பாடு கொடுப்பதற்காக உதவி பொலிஸ் அதிகாரி ஜெய் பிரகாஷ் சிங்கை சந்தித்தபோது, அவர் முதலில் என்னுடன் உறவு வைத்துக்கொள்ள விரும்புவதாக கூறினார்.
அவர் என்னை கையடக்கத்தொலைபேசியில் கூட அழைத்தார், தனியாக தனது அறையில் அவரை சந்திக்க வேண்டும் என என்னை அழைத்தார். நான் அவரை தவிர்த்த போது பதினைந்து நாட்களுக்கு முன்னால் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அவர் என்னிடம் பாலிஸ் பலாத்காரம் செய்த காட்சியைப் பற்றியும் மறுபரிசீலனை செய்யக்கூடிய கேள்விகளைப் பற்றியும் கேட்டார். குற்றவாளிகள் கைதானதும் தான் எனது எண்ணம் நிறைவேறியது இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து பொலிஸ் அதிகாரி சுதா சிங் கூறியதாவது:-
இந்த விவகாரம் குறித்து கஞ்ச் பொலிஸ் நிலைய அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். விரைவில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்வார் என கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM