உலகில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாகவே டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இலங்கையில் மேலும் டெங்குநோயின் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுகின்றது.
கடந்த மே மாதம் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையே தற்போது நாட்டில் டெங்கு நோய் அதிகரிக்க காரணமாகும். எவ்வாறெனினும் அவுஸ்திரேலியாவிலிருந்து பக்டீரியாவைக் கொண்டுவந்து அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனராட்ண தெரிவித்தார்.
மக்கள் தமது சுற்றுச்சூழலை மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் எந்தவொரு இடத்திலும் மூன்று நாட்களுக்கு மேலும் தண்ணீரை வைத்திருக்கவேண்டாம். குளியலறையில் கூட எந்தவொரு இடத்திலும் மூன்று நாட்களுக்கு மேல் நீரை வைத்திருக்க வேண்டாம் என்றும் அவர் எச்சரித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில் குப்பை பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இதுதொடர்பில் அனைத்துத் தரப்புக்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. குப்பைப் பிரச்சினையைத் தீர்ப்பதன் மூலம் டெங்கு பரவுவதை தடுத்து நிறுத்தலாம்.
எமது நாட்டில் குப்பையை மீள் சுழற்சிக்குப் பயன்படுத்தாமையே மிகப் பெரிய பிரச்சினையாகும்.
மீதொட்டமுல்லவில் குப்பை மேடு சரிந்ததன் மூலமே இது தொடர்பான அபாயம் அதிகரித்தது. கடந்த அரசாங்கமே இதனை முன்னெடுத்தது. பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தற்போது 122 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அவற்றில் சில நிறுவனங்களை தெரிவு செய்து இந்த நடவடிக்கையை முன்னெடுப்போம்.
கேள்வி : உள்ளூராட்சி மன்றங்கள் மக்கள் பிரதிநிதிகளுடன் இயங்கியிருந்தால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்காது என கூறப்படுகின்றது. இது தொடர்பில்?
பதில் : உள்ளூராட்சி மன்றங்கள் சீராக இயங்கிய காலத்திலும் குப்பை பிரச்சினை காணப்பட்டது. 2009 ஆம் ஆண்டு உள்ளூராட்சி நிறுவனங்கள் சிறப்பாக செயற்பட்டன. ஆனால் அந்த வருடத்தில் 349 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்தனர். எனவே உள்ளூராட்சி மன்றங்கள் குப்பை விடயத்தில் செயற்றிறனாக செயற்பட்டன என்று கூறமுடியாது. எவ்வாறெனினும் தற்போது எமது நாட்டில் மே மாதம் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாகவே டெங்குநோய் அதிகரித்தது.
இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். டெங்கு விழிப்புணர்வு திட்டங்கள் பரவலாக முன்னெடுக்கப்படுகின்றன. ஜேர்மனியிலிருந்து 500 புகையடிக்கும் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குப்பை பிரச்சினையைத் தீர்க்க முடியுமாயின் டெங்கு விடயத்தில் மேலும் முன்னேற்றத்தை காணலாம்.
எவ்வாறெனினும் வைத்தியசாலைகள் சிறப்பான சேவையை வழங்கி வருகின்றன.
டெங்கு நோயாளர்களின் உயிர்களை வைத்தியசாலைகள் காப்பாற்றி வருகின்றன. குப்பை பிரச்சினைக்கும் தற்போது சீரான தீர்வு காணப்பட்டு வருகின்றன. ஆனால் மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். உதாரணமாக மூன்று நாட்களுக்கு மேல் எங்கும் தண்ணீர் தேங்குவதற்கு இடமளிக்கவேண்டாம்.
குளியலறையிலுள்ள உபகரணங்கள் குளிர்சாதனப்பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நீர் எமக்கு தெரியாதவகையில் தேங்கியிருக்கும். அவ்வாறு மூன்று நாட்கள் அவ்வாறு நீர் தேங்கியிருந்தால் அங்கு நிச்சயம் டெங்கு நுளம்பு உருவாகும். இலட்சக்கணக்கான நுளம்புகள் உருவாகும். இதனைக்கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
குறிப்பாக அவுஸ்திரேலியாவில் இருந்து ஒருவிதமான பக்டீரியாவைக் கொண்டுவந்து டெங்கு நுளம்புகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக அவுஸ்திரேலிய அமைச்சர் இம்மாத இறுதியில் இலங்கை வரவுள்ளார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM