தேசப்பற்று ஏன் கிரிக்கெட்டை சுற்றியே உள்ளது என்பது புரியவில்லை என்று பங்களாதேஷ் கிரிக்கெட் அணித் தலைவர் மோர்தசா கூறியுள்ளார்.
மொட்டர்ஷா தலைமையிலான பங்களாதேஷ் அணி ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முதன்முறையாக முன்னேறியது. ஆனால், இந்தியாவிடம் தோல்வியடைந்து இறுதி வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில் தேசப்பற்று ஏன் கிரிக்கெட்டை சுற்றியே உள்ளது என்பது எனக்குப் புரியவில்லை என்று மோர்தசா கூறியுள்ளார்.
இதுகுறித்து மொட்டர்ஷா கூறுகையில் ‘‘நான் ஒரு கிரிக்கெட் வீரன். ஆனால், என்னால் உயிரை காப்பாற்ற முடியுமா? வைத்தியரால்தான் உயிரை காப்பாற்ற முடியும். ஆனால், நாட்டின் சிறந்த வைத்தியரை யாரும் பாராட்டுவதில்லை.
ஒரு நடிகர் சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை செய் வதுபோல் நாங்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு விளையாடுகிறோம். இதைவிட மேலும் ஒன்றுமில்லை. சிலர் தேசப்பற்று, தேசப்பற்று என்று கிரிக்கெட்டை சுற்றியே சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.
கிரிக்கெட்டால் உங்களுடைய சக்தி வீணாகிவிடக்கூடாது. நேர்மையான வேலைக்காக அதனைப் பயன்படுத்த வேண்டும். மக்களின் தேசப்பற்றின் வரையறையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM