எமது நாட்டில் இனிவரும் காலங்களில் உடல் தகுதிகாண் பரிசோதனையில் சித்தியடையும் வீரர்கள் மட்டுமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
வயிற்றில் 12 வீதத்திற்கு மேல் கொழுப்பை கொண்டிருக்கும் வீரர்கள் எவ்வளவு திறமையைக் கொண்டிருந்தாலும் கிரிக்கெட் போட்டி களில் விளையாடுவதற்கு தகுதியானவர்களாக கருதப்படமாட்டார்கள். இந்த விடயத்தில் மிகவும் கண்டிப்பாக இருக்கின்றேன் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் தயா சிறி ஜயசேகர ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கேள்வி: கிரிக்கெட் வீரர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கவேண்டுமென நீங்கள் கூறியிருந்தீர்கள். ஆனால் யுத்தம் முடிந்துவிட்ட நிலையில் இராணுவப் பயிற்சி எதற்கு என வீரர் லசித் மலிங்க கூறியிருந்தார். இது தொடர்பில்?
பதில்: நான் பல்வேறு விடயங்களையும் ஆராய்ந்து விட்டே இந்த விடயத்தை கூறியுள்ளேன்.
கிரிக்கெட் வீரர்களுக்கு உடல் தகுதி என்பது மிகவும் அவசியமானதாகும். இந்த விடயத்தில் நான் உறுதியாக இருக்கப்போகின்றேன்.
திறமையிருந்தால் மட்டும் போ தாது, உடல் தகுதி இருக்கவேண்டும். சில வீரர்கள் தங்களது உடல் தகுதியை இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் மட்டுமே வெளிக்காட்டுகின்றனர்.
ஆனால் இனிமேல் உடல் தகுதி என்பது மிகவும் அவசியமாகும். இனிவரும் காலங்களில் உடல் தகுதிகாண் பரிசோதனையில் சித்தியடையும் வீரர்கள் மட்டுமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
வயிற்றில் 12 வீதத்திற்கு மேல் கொழுப்பை கொண்டிருக்கும் வீரர்கள் எவ்வளவு திறமையைக் கொண்டிருந்தாலும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு தகுதியானவர்களாக கருதப்படமாட்டார்கள்.
இலங்கை வீரர்கள் மிகவும் திறமையானவர்கள் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் உடல் தகுதியும் மிகவும் முக்கியமானதாகும். 125 ஓட்டங்களைப் பெற்ற இந்திய வீரர் தவான் அதன் பின்னர் 50 ஓவர்கள் களத்தடுப்பில் ஈடுபடுகின்றார்.
அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் எமது வீரர்கள் 50 ஓட்ட ங்கள் பெற்றவுடனேயே காலைப்பிடித்துக் கொண்டு உட்கார்ந்துவிடுகின்றார்கள்.
உடல்தகுதி அதிகாரி அடிக்கடி மைதானத்திற்கு வரவேண்டி ஏற்படுகின்றது. இந்த நிலைமைக்கு இனி இடமளிக்க முடியாது. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் வீரர் அக்மல் உடல்தகுதி இல்லாததால் இங்கிலாந்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டிருந்தார். இவ்வாறு பல விடயங்கள் உள்ளன. எவ்வாறெனினும் இனி உடல்தகுதி என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும் என்று குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM