பிணையில் விடுவிக்கப்பட்டார் ஞானசார தேரர்..!

Published By: Robert

21 Jun, 2017 | 12:07 PM
image

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் முன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றில் ஆஜராகத் தவறியதையடுத்து, ஞானசார தேரரை கைது செய்வதற்கு நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தார்.

நீதிமன்றத்தை அவமதித்ததாக ஞானசார தேரர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதேவேளை, தேசிய பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வட்டரக்க விஜித தேரரை மிரட்டியமை மற்றும் குரானை அவமதித்ததாக கூறப்படுகின்ற சம்பவம் தொடர்பிலும் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களை கூறி ஞானசார தேரர் நீதிமன்றத்திற்கு சமூகமளித்திருக்கவில்லை.

எனினும் ஞானசார தேரர் இந்த வழக்கில் முன்னிலையாகாமை காரணமாக கடந்த 15 ஆம் திகதி அவரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16